ஓபிஎஸ் மகனுக்கு பாலா மனைவிக்கு அந்த மாதிரி உறவு… அபஷான் செய்ய மருத்துவமனையில் பாலா மனைவி..

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இயக்குனர் பாலா தனது படத்தில் நடிகைகளை மிக கொடூரமாகவும், அசிங்கமாகவும் காட்டியிருப்பார். இதனால் பாலாவுக்கு பெண்களை பிடிக்காது என்கிற விமர்சனமும் உண்டு. ஆனால் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் இயக்குனர் பாலா என்பது அவரது மனைவி மற்றும் அவரது மகள் மீது எல்லை கடந்த அன்பும் காதலும் உண்டு என்பதை அவரது மனைவியே பல முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி சந்தோசமாக சென்ற இவர்களில் வாழ்க்கையில் தடம்மாறி பயணிக்க தொடங்கியுள்ளார் பாலா மனைவி முத்துமலர். முக்கிய அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சுமார் நான்கு வருடம் கணவர் பாலாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், பாலா – முத்துமலர் பிரிவுக்கு காரணமாக இருந்தது அரசியல் முக்கிய தலைவரின் மகன் தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாலா மனைவி முத்துமலர் உடன் கிசு கிசுக்கபட்ட அரசியல் பிரமுகரின் மகன் யார் என்கிற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில்,தற்பொழுது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியின் தோழி காயத்ரி என்பவர் ரவீந்திரநாத் மற்றும் பாலா மனைவி முத்துமலர் இருவருக்கும் இருக்கும் உறவு பற்றி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். MP ஓபி ரவீந்திரநாத் எங்களுக்கு குடும்ப நண்பர் என தெரிவித்துள்ள காயத்ரி.

கொடைக்கானலில் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே அவரை தெரியும். கடந்த 10 வருடங்களாக எனக்கு நல்ல குடும்ப நண்பர். அதே போல் அவரின் மனைவி ஆனந்தியும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். எந்த ஒரு குடும்ப பிரச்சனை என்றாலும்… அதுபற்றி என்னிடம் அவர்கள் பேசுவது வழக்கமான ஒன்று தான் என தெரிவித்த காயத்ரி தேவி,

மேலும் பாலாவின் மனைவி மலர், ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களுக்கே தெரியாமல் எப்படியோ ரவீந்தர்நாத்துக்கும் – மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது. ஒரு நிலையில் மலர் பணத்துக்காக அபாஷன் செய்வது போல், மருத்துவமனையில் இருந்து கொண்டு நடித்தது மட்டும் இன்றி, என்னையும் அவருக்கு ஆதரவாக, ரவீந்தர்நாத்திடம் பேச சொன்னார்.

அவர் நடிப்பதை அறிந்ததும் எனக்கு முத்துமலர் மேல் இருந்த, மரியாதை போய் விட்டது. இனி உன்னுடைய நட்பே வேண்டாம் என மலரிடம் இருந்து விலகி விட்டேன். இதுபற்றி ரவீந்தரநாத்திடமும்… அண்ணா மலர் உங்களை ஏமாற்றுவதற்காக நடிக்கிறார் என தெரிவித்ததாக காயத்ரி தேவி பேசியுள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அரசால் புரசலாக இயக்குனர் பலா மனைவி முத்துமலர் மற்றும் ரவிந்த்ரநாத் இருவருக்கும் இடையில் கிசு கிசு வெளியான நிலையில், தற்பொழுது இயக்குனர் மனைவி மலருக்கும் ரவீந்திரநாத்துக்கும் இடையே தகாத உறவு இருந்தது உண்மைதான். இதனால் தான் பாலாவிற்கும் மலருக்கும் விவாகரத்து ஏற்பட்டது என்று பகிரங்கமாக காயத்ரி தேவி தெரிவித்துள்ளது ரவீந்திரநாத்க்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தன்னிடமும் தவறான முறையில் ரவீந்திரநாத் பேசியதாகவும், முத்துமலர் மலர் மாதிரி உன்னையும் நன்றாக வைத்து ராணி மாறி பார்த்துக் கொள்கிறேன். வேண்டும் என்றால் கல்யாணம் கூட செய்து கொள்கிறேன் என்றெல்லாம் ரவீந்திரநாத் தன்னிடம் பேசியதாக காயத்ரி தேவி தெரிவித்துள்ளது, ரவீந்திரநாத் அரசியலுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.