நீ தான் அம்பானி பேமிலியாச்சே… ஒழுங்கா பணத்தை கொடு…. சிவகுமார் உறவினரை இறுக்கி பிடிக்கும் சமுத்திரக்கனி…

0
Follow on Google News

தற்போது ஞானவேல் ராஜா – அமீர் இடையேயான பிரச்சனை மிக பெரிய அளவில் தலை தூக்கி உள்ளது . அண்மையில் பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பு சம்பந்தமாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குனர் அமீர் அவர்களை கடுமையாக சாடி, அவர் பேசிய பல விஷயங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ஞானவேல் ராஜாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சமுத்திரக்கனி, இயக்குனர் சுதா கொங்கரா, சசிகுமார் உள்ளிட்ட பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி சினிமா பிரபலங்கள் பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவிப்பதைப் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தொடர்ந்து அமீர் பற்றி நக்கல், நய்யாண்டியாக இழிவு படுத்தும் வகையில் பேசி வந்த ஞானவேல் ராஜா.

ஆகா … ஓன்று கூடிட்டாங்கய்யா…ஓன்று கூடிட்டாங்க.. என வடிவேல் நகைசுவை காட்சிகளில் வருவது போன்று இதுக்கு மேல தாங்காது, உடனே கடைய காலி செய்தே ஆக வேண்டும் என அமீர் குறித்த தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றை ஞானவேல் ராஜா வெளியிட்டிருந்தார். அதில் அமீருக்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய வார்த்தைகள் அவரை காயப்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார்.

ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் இனி முடிவுக்கு வந்துவிடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், எங்கடி மாப்பிளை தப்பிக்க பாக்குற, என, நீ தான இந்த பிரச்சனையை பெருசாக்குன, நாங்க இனி விடுவதாக இல்லை என சமுத்திகானி மற்றும் சசிகுமார் ஆகியோர் ஞானவேல் ராஜாவை சும்மா விடுவதாக இல்லை.

இது மாதிரியான போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது என தெரிவித்த சசிகுமார், மேலும் திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு பின்னர் அதற்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? ” என வருத்தத்தை எல்லாம் ஏத்துக்கோ முடியாது என்கிற தோணியில் தெறிவித்துள்ளார்.

மேலும் நடிகர் சமுத்திரக்கனி பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீன் எல்லாம் இங்க வேலைக்கு ஆகாது. என தெரிவித்தவர் மேலும் எந்த பொது வெளியில எகத்தாளமாக உட்கார்ந்து அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைச்சீங்களோ ..அதே பொதுவெளியில பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும் ..நீங்க கொடுத்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவை சோசியல் மீடியாவில் இருந்து தொடச்சு தூர எரியனும் .

அன்னைக்கு ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும் …என்ன கடனை வாங்கின நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. பருத்திவீரன் படத்தில் நடித்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு சம்பள பாக்கி இருக்கு. பாவம் அவங்க எல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க… நீங்கதான் அம்பானி ஃபேமிலி ஆச்சே !! காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி! என்று நடிகர் சமுத்திரக்கனி ஒழுக்கமா பணத்தை கொடு, எங்க வருத்தம் தெரிவித்து எஸ்கேப் ஆக பாக்குற என்கிற தோரணையில் ஞானவேல் ராஜாவை எச்சரிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஞானவேல் ராஜாவே இந்த விவகாரத்தில் வருத்தம் கேட்டு எஸ்கேப் ஆக நினைத்தாலும் சமுத்திரக்கனி, சசிகுமார் இருவரும் எங்கடி மாப்பிளை ஓட பாக்குற என ஞானவேல் ராஜாவை ரவுண்டு கட்டி வருவதால் வசமாக சிக்கி கொண்டார் ஞானவேல் ராஜா. ஆகையால் இந்த விவகாரத்தால் தன்னுடைய உறவினரை காப்பாற்ற என்ன செய்ய போகிறது சிவகுமார் குடும்பம் என்கிற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.