மது, கஞ்சா புகை பழக்கம்… அதிக பாய் ஃபிரண்ட் …. சித்ரா பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சினிமா பிரபலம்..!

0
Follow on Google News

சின்னத்திரை நடிகை சித்ரா காதலித்து வந்த காதலன் ஹேம்நாத் உடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பது உறுதியாக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் நடிகை சித்ரா தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட போது அதே ஓட்டலில் அவருடைய காதலன் ஹேம்நாத் இருந்துள்ளார்.

சித்ரா தீடிர் தற்கொலை பல்வேறு பீதியை கிளப்பிய நிலையில், சித்ரா பெற்றோர் அவர்களின் மகள் தற்கொலைக்கு காரணம் ஹேம்நாத் தான் என்று பகிரங்கமாக குற்றசாட்டுகளை வைத்தனர், மேலும் ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் அந்த பெண்களிடம் ஏமாற்றி பணம் பறிப்பதாகவும் அது போன்று தான் சித்ராவையும் ஹேம்நாத் பயன்படுத்தினார் என்கிற குற்றசாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்ட பின்பும் கூட சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது உறுதியான தகவல் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு அடிக்கடி வரும் ஹேம்நாத் அங்கே சித்ரா உடன் பல முறை சண்டையிட்டதாக படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததும், மேலும் சித்ரா நெருங்கிய தோழிகள் ஹேம்நாத் வேண்டாம் அவரை விட்டு விலகி விடு என அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் சித்ரா தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் கொத்து கொத்தாக ஆணுறைகள் இருந்ததாக தற்கொலை செய்து கொண்ட சித்ரா தோழி ஒருவார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார், இதனால் சித்ராவை தவறாக பயன்படுத்தினரா ஹேம்நாத் என்கிற விவாதம் சினிமா வட்டாரதத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் எதற்காக இவர்கள் அறையில் ஆணுறை இருந்தது என்கிற சந்தேகம் பலருக்கு இருந்தது.

ஹேம்நாத் மீது எந்த அளவுக்கு புகார்கள் குவிந்தது, அதே போல தான் சித்ரா மீது புகார் குவிந்து கொண்டிருக்கிருக்கிறது, ஹேம்நாத் மூலம் தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஜாலியாக இருக்க சித்ரா அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற பேச்சும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சினிமா முக்கிய பிரமுகர் ஒருவர் சித்ரா குறித்து திடுக்கிடும் மற்றொரு தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சித்ராவுக்கு அதிகமான ஆண் நபர்கள் உண்டு என்றும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் மற்றும் கஞ்சா அருந்தும் பழக்கமும் உண்டு என்று தெரிவித்த அந்த சினிமா பிரபலம், மேலும் சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியலில் சித்ரா உடன் தான் நடித்த போது, அவர் ரெஸ்ட் ரூம் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வருவார் அப்போது கஞ்சா வாடை வரும், இது குறித்து அந்த சீரியலில் நடித்த நடித்த நளினியிடம் கேட்ட போது, அது சித்ரா வேலை தான் கண்டு கொள்ள வேண்டாம் என தெரிவித்ததாக அந்த சினிமா பிரபலம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

என் மகளிடமே உன் சில்மிஷத்தை காட்டுறியா… தனுஷை விரட்டியடித்த போனிகபூர்..! என்ன நடந்தது தெரியுமா..