வனிதா விஜயகுமார் 4வது திருமணம்…. ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்..

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. அந்த வகையில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் வனிதா விஜயகுமார். தமிழ் திரையுலகில் நடிகையாக களம் இறங்கினார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா விஜயகுமார் போல இவரது நடிப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் சில படங்களில் நாயகியாக நடித்த நிலையில் அதன் பிறகு சினிமா பக்கம் காணவில்லை. பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் அதில் நிறைய பிரச்சனைகள் சந்தித்த இவர் வெளியே வந்த பிறகு நடிப்பு மற்றும் பிசினஸ் என பிஸியாக இருந்தாலும் தனக்கான நேரத்தை கொண்டாடி வருகின்றார் இவருடைய திருமண வாழ்க்கை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர் முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின் ராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்கவில்லை, அவரிடமும் விவாகரத்து பெற்றார்.பின் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வனிதாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது என கிசு கிசுக்கப்பட்டது. கடைசியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் சில நாட்களே நீடித்தது. இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் தன்னுடைய நான்காவது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். இதில் ரசிகர் ஒருவர் நான்காவது திருமணம் குறித்து வணிதாவிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஹார்டின் எமோஜியுடன் பதில் கூறியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் இவர் நான்காவது திருமணத்தை செய்து கொள்வாரா? அல்லது ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து செய்த தன்னுடைய கணவருடன் சேரப் போகிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இப்படியொரு சூழ்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்ளின் கேள்விக்கு பதிலளித்து வந்த வணிதாவிடம் ரசிகர் ஒருவர், எப்போது 4வது திருமணம்? எங்களையும் கூப்பிடுங்க என கேட்டார்.

இதற்கு வனிதா ‘போஸ்டர் அடித்து நியூஸ் கொடுப்பேன். தமிழ்நாட்டையே அழைப்பேன்’ என கூறியுள்ளார். 4வது திருமணம் குறித்து வனிதா பேசியது தற்போது ரசிகர்களுக்கு இடையே வைரலாகி வருகிறது. நான்காவது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் பேசியதை சமூக ஊடகங்களின் பார்த்து தெரிந்து கொண்ட அவரது தங்கை ப்ரீத்தா கடுமையான கோபத்தில் இருக்கிறார் என்ற விஷயம் இணைய பக்கங்களில் வெளியாகி வந்தது.

மேலும் இவர் வனிதா விஜயகுமார் பற்றி பேசுகையில் கூட பிறந்த பாவத்திற்காக நீ செய்யும் செயல்களுக்கு எங்களுடைய பெயரும் சேர்ந்து கெடுகிறது. நீ எல்லாம் பொம்பளையாடி என்ற கேட்கக் கூடிய வகையில் உச்சகட்ட கடுப்பில் ப்ரீத்தா இருக்கிறார். இந்த விஷயமானது இணைய பக்கங்களில் தகவலாக வெளி வந்து பரபரப்பை கிளப்பி இருந்தது.