திரிஷா கனவில் மண்ணை அள்ளிப்பட்ட நயன்தாரா.. இரண்டு குழந்தைக பிறந்தும் அடங்கவில்லை..!

0
Follow on Google News

நடிகை திரிஷா டாப் நடிகையாக இருந்த காலகட்டத்தில் நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்ததற்கு பின்பு திரிஷாவின் மார்க்கெட் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கினார் திரிஷா. ஆனால் மறுபக்கம் நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை வாங்கி நம்பர் ஒன் நடிகையாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் பலம் வந்து கொண்டிருந்தார்.

இந்த சூழலில் பலமுறை மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்த திரிஷா பல முயற்சிகள் எடுத்தும் அதற்கான வாய்ப்பை நயன்தாரா தரவில்லை. திருமணம் முடிந்து தற்பொழுது இரட்டை குழந்தைக்கு தாயான நயன்தாராவின் இடத்தை பிடிக்க பல நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலை வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மேலும் நயன்தாரா இல்லாததை தனக்கு ஜாதகமாக்கிக் கொண்டு, அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர் படத்தில் கமிட்டாகி வருகிறார் திரிஷா.

திருமணம் முடிந்து இரட்டை குழந்தைக்கு தாயான நயன்தாரா, இனி சினிமாவில் தலை காட்ட மாட்டார் என்கின்ற தகவல் வெளியான நிலையில், தற்பொழுது தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார், இந்தப் படத்தில் மாதவன் மற்றும் சித்தார் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என கூறப்படும் நிலையில், நயன்தாராவும் கமிட்டாகியுள்ளார்.

இதனால் திருமணம் முடிந்தால் கூட அடுத்தடுத்து நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவியும் என்றும், திரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், பாடல் காட்சிகளில், காதல் காட்சிகளில் நடித்துவிட்டு வழக்கம்போல் பத்தோடு பதினொன்னாவது கதாநாயகி தான் இருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு குழந்தையை பெற்றும் நயன்தாரா அடங்கவில்லை என்று திரிஷாவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது