அஜித்தை நம்பி மோசம்போன திரிஷா… அந்த விதத்தில் விஜயை கோவில் கட்டி கும்பிடலாம்…

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம், மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இடையில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு பொன்னியின் செல்வன் ஒரு கம் பேக் படமாக இருந்தது.

குறிப்பாக, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு படங்களின் ப்ரோமோஷன், ஆடியோ லாஞ்ச் மற்றும் சக்சஸ் மீட் என அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட திரிஷாவின் இளைமை குறையாத அழகினால் ஏராளமான ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். மேலும், அதனையடுத்து பல்வேறு படவாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இப்போது தென்னிந்திய சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகைகளில் திரிஷாவும் ஒருவர் என்று கூறலாம். இந்த நிலையில் தான், திரிஷாவுக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் பாலிவுட்டில் டாப் ஹீரோவான சல்மான் கான் படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரன் ஜோகர் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவ்வாறு இருக்கையில், திரிஷா இந்தப் படத்தின் மூலம், பாலிவுட்டில் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்து நடித்தால், திரிஷாவின் மார்க்கெட் எகிறி விடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இது நிச்சயமாக நடிகை திரிஷாவிற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று தான சொல்ல வேண்டும். ஆனால், திரிஷாவைத் தேடி வந்துள்ள பாலிவுட் பட வாய்ப்பை திரிஷாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

அதற்குக் காரணம் நடிகர் அஜித் தான். “என்னடா இது!! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்பது போலத்தான் இப்போ நடிகை திரிஷாவின் நிலைமை… ஆமாங்க…பாலிவுட்டில் உருவாகவுள்ள இந்தி படத்தின் படபிடிப்பு தேதியும் அஜித் நடிப்பில் தயாராகவிருக்கும் விடாமுயற்சி படபிடிப்பின் தேதியும் ஒன்றாக வருவதால் திரிஷாவால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அப்படியா!! அப்போ திரிஷா நழுவ விட்ட வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது? என்று உங்களுக்குள் கேள்வி எழும்.. திரிஷா நடிக்கவில்லை என்பது உறுதியானதும், தயாரிப்பாளர் கரன் ஜோகன் “திரிஷா இல்லைனா சமந்தா”ன்னு திரிஷாவிற்கு பதிலாக சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். சமந்தாவும், இதுதான் சான்ஸ்னு சல்மான் கான் கூட ஜோடி சேர சம்மதம் கூறிவிட்டாராம்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை திரிஷா விஜய் உடன் லியோ படத்திலும், அஜித்துடன் விட முயற்சி படத்திலும் கமிட்டானார், ஒரே நேரத்தில் இரன்டு முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடலாம் என்கிற திட்டத்தில் இருந்து வந்தார் திரிஷா,

இந்நிலையில் விஜய் படத்தில் கமிட்டான திரிஷா சொன்ன தேதியில் படத்தை முடித்து அனுப்பி விட்டார்கள்,விரைவில் லியோ படம் திரைக்கு வர இருக்கிறது ஆனால் விடாமுயற்சி படம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அந்த வகையில் அஜித்துடன் இணைந்து நடித்தால் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பி கமிட்டாகி தற்பொழுது நல்ல வாய்ப்புகளையெல்லாம் இழந்து வருகிறார் திரிஷா.