ஓவர் நடுக்கம்.. லியோ படப்பிடிப்பில் இருந்து ஓட்டம் எடுத்த திரிஷா… அங்கே நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடித்துள்ளது, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக, பட குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளார்கள், இதில் இந்த படத்தில் நடிக்கும் விஜய் , திரிஷா , லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் காஷ்மீர் சென்றுள்ளார்கள்.சுமார் 14 வருடங்களுக்கு பிறகு விஜய் உடன் லியோ படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார் திரிஷா.

பொதுவாகவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய வேளையில் மிக தீவிரமாக இருக்க கூடியவர். அந்த வகையில் காஷ்மீர் சென்ற உடனே படப்பிடிப்பை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், ஒரே நாளில் மூன்று லொகேஷனலில் படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு அதி வேகமாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார், காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்த திட்டமிட்டுள்ள லியோ பட குழுவினர், காஷ்மீரில், ஸ்ரீநகரில் உள்ள நட்சதிர ஓட்டல் ஒன்றில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் உட்பட நட்சத்திரங்கள் மட்டும் அங்கே தங்கி வருகிறர்கள்.

மற்றவர்கள் அருகில் உள்ள வேறு ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள், இந்த நிலையில் காஷ்மீரில் குளிர் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது, இதனால் குளிர் தாங்க முடியாமல் தவித்து வரும், திரிஷா, விஜய் ஆகியோர் படப்பிடிப்பு இடைவேளையில் விறகுகளால் பற்ற வைத்த நெருப்பில் இருவரும் குளிர் காய்ந்து வருகிறார்கள், இதில் விஜய் ஓரளவுக்கு குளிரில் தாக்கு பிடித்து விடுகிறார், ஆனால் திரிஷா மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது குளிர் தாங்க முடியாமல் சென்னை திரும்பியுள்ள திரிஷா, தான் நடிக்கும் காட்சிகள் படமாக்கும் பொழுது மட்டும் காஷ்மீர் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார் திரிஷா என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மனோ பாலா நடிக்க இருப்பதால், அவர் உடம்புக்கு காஷ்மீர் குளிர் தாக்கு பிடித்து விடுவாரா.? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.