விஜய் வீட்டுக்குள் புகுந்து சடுகுடு விளையாடினாரா திரிஷா.? விஜயை விட்டு மனைவி பிரிய இது தான் காரணமா?

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் நடிகர் விஜயும் ஒருவர். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்துள்ளார். மேலும், லியோவின் பிரம்மாண்டமான ரிலீசுக்காக படக்குழுவினர் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், பிரபல லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு தந்தையும் மகனும் வெவ்வேறு கோணத்தில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அவர்கள், ஜேசன் சஞ்சய்க்கும் நடிகர் விஜய்க்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லை என்றும், சஞ்சய்க்கு லைகா தயாரிப்பு நிறுவனத்தில், படம் இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் பற்றியும், அவரது மகன் சஞ்சய் பற்றியும் அந்தணன் வெளியிட்டுள்ள செய்திகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது மற்றும் விஜய் ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளது. விஜயைப் போலவே, மகன் சஞ்சயும் சினிமாவில் ஹீரோவாக வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தன் தாத்தாவைப் போல் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் சஞ்சய் கனடாவில் படிப்பை முடித்ததும் தமிழ்நாட்டிற்கு திரும்பியிருக்கிறார்.

ஆம், சஞ்சய்க்கு சிறுவயதிலிருந்தே இயக்குனராக வேண்டும் என்பதே கனவாக இருந்தததாக, விஜயின் அம்மா ஷோபா பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லலாமல், இயக்குனராக வேண்டும் என்பதற்காக அமெரிக்கா, லண்டன் மற்றும் கனடா என வெளிநாடுகளில் ஃபிலிம் மேக்கிங் குறித்த படிப்பை படித்து முடித்துள்ளார். இதனையடுத்து, தமிழகத்திற்கு திரும்பிய ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கப் போவதாக வெளியாகிய தகவல்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

பிரபலங்களின் வாரிசு என்பதாலேயே எளிதில் திரையுலகில் நுழைந்து விடுகிறார்கள் என்றெல்லாம் பலவாறு சஞ்சய்யை நோக்கி பல விமர்சனங்கள் பாய்ந்தன. ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாத சஞ்சய் படத்தை இயக்குவதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கிக் கொண்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து, சஞ்சய் மற்றும் விஜய் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் பேசி உள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தணன் தெரிவித்துள்ளதன் படி, விஜய் சங்கீதா தம்பதியினரிடையே மனஸ்தாபம் இருப்பதாகவும், இதனால் சங்கீதா நடிகர் விஜயைப் பிரிந்து தன் மகள் திவ்யா ஷாஷா மற்றும் அப்பா சொர்ணலிங்கம் அவர்களுடன் வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. நடிகர் விஜய்க்கு சங்கீதாவுடன் இருக்கும் மனக்கசப்பினாலேயே, அவரது மகன் சஞ்சயும் விஜயிடம் சரியாக பேசுவதில்லை என அந்தணன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், முதலில் சஞ்சய் படம் இயக்கவுள்ளது அப்பா விஜய்க்கு தெரியாது என்றும், லைகா நிறுவனத்தில் சஞ்சய்க்கு கிடைத்துள்ள வாய்ப்பானது, சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் அவர்களின் பரிந்துரையால் கிடைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில், நடிகை திரிஷாவுடன் விஜய் சுற்றுலா சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனால் மனம் உடைந்த சங்கீதா விவகாரத்து கேட்டிருப்பதாகவும், அப்பா விஜய்க்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடவே, மகன் சஞ்சய்க்கு ஆதரவாக சங்கீதா இருந்து வருவதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இவ்வாறு வெளியான தகவல்கள் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை…