உன் தேவைக்கு என்னால் வர முடியாது…திரிஷா – ராகவலாரன்ஸ் உச்சகட்ட மோதல்…. திரிஷா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி, இந்த படம் வெளியாவதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் பாபா. இந்த படத்திற்கு பின்பு ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை முடிந்தது என்று பலர் கிண்டல் செய்ய. நான் யானை அல்ல, குதிரை. விழுந்த உடனே எழுந்து விடுவேன் என்று சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவில் பேசினார் ரஜினிகாந்த்.

அந்த அளவுக்கு ரஜினிக்கு கம் பேக் கொடுத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது சந்திரமுகி. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பி வாசு சந்திரமுகி பார்ட் 2 எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நடிகர் ரஜினிகாந்திடம் கால் சீட் கேட்டு காத்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் வேறு வேறு இயக்குனர் படங்களில் கமிட்டாகி கொண்டே இருந்தாரே தவிர, வாசுவுக்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.

இதனால் காத்திருந்தது போதும் என்று முடிவு செய்த பி.வாசு, சந்திரமுகி பார்ட் 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கால்ஷீட் கேட்டு அதற்கான வேலைகளையும் தொடங்கி உள்ளார் பி வாசு. இந்த படத்தில் கதாநாயகியாக முதலில் சாய் பல்லவி நடிக்க அவரிடம் கதை சொல்லியுள்ளார் பி.வாசு, கதை கேட்டு கொண்டிருக்கும் போதே அது சரியில்லை, இது சரியில்லை, கதையில் மாற்றம் செய்யவேண்டும் என சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

இதனால் டென்ஷனான பி வாசு, நீ இந்த படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு, வேறு ஒரு நடிகையாக நடிகை திரிஷாவை அணுகி படத்தின் கதையை தெரிவித்து ஓகே செய்துள்ளார். ராகவ லாரன்ஸ் பல படங்களில் நடித்து வருகிறார், அதே நேரத்தில் திரிஷா சினிமா வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே சும்மாதான் இருக்கிறார் என்பதற்காக நாம் எப்போது படப்பிடிப்புக்கு அழைத்தாலும் அவர் வந்துவிடுவார் என்பதால்.

பி வாசு மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் சேர்ந்து சந்திரமுகி 2 படத்தில் திரிஷாவை நடிக்க ஒப்பந்தம் செய்தனர். சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு லாரன்ஸ் மற்ற படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் எப்போது அவருக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டும் சந்திரமுகி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஆகையால் ஆக லாரன்ஸ் தேவைக்கு ஏற்ப த்ரிஷா படப்பிடிப்புக்கு அழைக்கப்பட்டு கொண்டிருந்தார்.

இப்படி தீடிர் தீடிர் என திரிஷாவை ஷூட்டிங் அழைத்துள்ளனர், இதனால் தனக்கு வாய்ப்பு இல்லாததால் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என டென்ஷனான த்ரிஷா, நீங்கள் கூப்பிட்டவுடன் என்னால் வர முடியாது. உங்க தேவைக்கு நான் ஆள் கிடையாது என அந்தப் படத்தில் இருந்து சண்டையிட்டு வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் பின்பு தற்பொழுது திரிஷா கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமிமேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?