ப்ளூ பிலிம் வீடியோ விவகாரத்தில் ரஜினியை ரோஜா உள்ளே இழுத்துவிட்டது ஏன்.? கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்..

0
Follow on Google News

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது கைதை நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான ரோஜா, தொண்டர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.இந்தநிலையில், நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என ஆந்திர முன்னாள் அமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியுமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்திருந்தார். 

மேலும், நடிகை ரோஜா நடித்ததாக ஒரு வீடியோவையும் சட்டசபையில் பண்டாரு காட்டியுள்ளார். இதற்கு பெண் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ரோஜா கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் நிர்வாண படத்தில் நடித்ததாகக் கூறி, சித்ரவதை செய்கின்றனர். சட்டப்பேரவையிலும் சி.டி.க்கள் காட்டப்பட்டன. 

ஆனால், அதில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. எனது புகழ், முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வாய்க்கு வந்தபடி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியிருக்கிறார். அவரை யாரும் கண்டிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பேசி, அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி நினைத்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்” இவ்வாறு ரோஜா கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக பல நடிகைகள் ரோஜாக்கு சப்போர்ட் செய்தனர். இந்நிலையில் ரோஜா ஒரு நேர்காணலில் நாசூக்கா ரஜினியை உள்ளே இழுத்து விட்டுள்ளார். 

ரோஜா தெரிவிக்கையில், சந்திரபாபு நாயுடு கட்சியினர் என்னை பற்றி பேசும்பொழுது ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும்.  அவருடன் இரண்டு படத்தில் நடித்திருந்தேன் நான் ஆபாச பட நடிகையா என்பது பற்றி அவருக்கு தெரியும். பெண்ணை பற்றி தவறாக பேசக்கூடாது என ரஜினி சார் பேசியிருந்தால் அவருக்கு நான் சல்யூட் அடித்து இருப்பேன்” என கூறினார்.

இந்த நிலையில் நடிகை ரோஜா குறித்து சட்டசபையில் சந்திரபாபு நாயுடு கட்சியினர் ஒருவர், ஒரு வீடியோவை காண்பித்து ரோஜா ஆபாச பட நடிகை என தெரிவித்ததற்க்கு, என்னை பற்றி நடிகர் ரஜினிகாந்துக்கு தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என நடிகை ரோஜா சம்பந்தமே இல்லாமல் ரஜினிகாந்தை இந்த விவகாரத்தில் ரஜினிகாந்தை உள்ளே இழுத்து விட்டுள்ளது ஆந்திர அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு எந்தத் தவறையும் செய்திருக்க மாட்டார். பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது. அவரது தன்னலமற்ற பொது சேவை அவரை நிச்சயமாக வெளியே கொண்டு வரும். தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்” என்று ஆறுதல் கூறியதாக செய்தி வெளியானது.

இதற்கு நடிகை ரோஜா மிக கடுமையாக ரஜினிகாந்தை தாக்கி பேசியிருந்த நிலையில் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ள ரோஜா குறித்த ஆபாச பட வீடியோ சர்ச்சைக்கு ரஜினிகாந்திடம் என்னை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என ரோஜா தெரிவித்துள்ளது, அவர் பாட்டுக்கு சிவனேனு தான இருக்கார் அவரை ஏன் உள்ளே இழுத்து விடுகிறார் ரோஜா என ஆந்திராவில் உள்ள ரஜினி ரசிகர்கள் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.