ரச்சித்தாவால் நாங்கள் பட்ட வேதனை போதும்… அவள் தேவையே இல்லை… கண் கலங்கிய தினேஷ் பெற்றோர்..

0
Follow on Google News

சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக நடித்த ஒரு சிலர் ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். அந்த வகையில் சீரியல்களில் இணைந்து நடித்த ரச்சித்தா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து பின்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தான் ரச்சித்தா மற்றும் தினேஷ் இணைந்து நடித்தனர்.

ரீல் ஜோடியாக நடித்த இவர்களுக்குள் காதல் மலர ரியல் ஜோடிகளாக மாற ஆசைப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன பின்பும் ரச்சித்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து அனைவரிடமும் பிரபலமான ரட்சிதா ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் ஆதரவை பெற்றார் ரச்சித்தா.

ரச்சித்தா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நிகழ்ச்சியில் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. மேலும், இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். பின் சிறிதுநாட்களிலேயே ரச்சித்தா, தினேஷ் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தினேஷ் ஆபாசமாக திட்டி மெசேஜ் செய்து வருவதாகவும், தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தினேஷ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சென்றுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ் மற்றும் அவருடைய மனைவி ரச்சிதா இருவரும் பிரிந்திருக்கும் நிலையில் தினேஷ் தன்னுடைய மனைவியோடு மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பல இடங்களில் தன்னுடைய ஆசையை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தினேஷ் பற்றி அவருடைய பெற்றோர் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பேசி இருக்கின்றனர்.

அவர்கள் பேசியதாவது, பிக் பாஸுக்குள் போவதற்கு முன்பே தினேஷுக்கு பிரதீப்தான் பிடிக்கும். அவர் நல்லா விளையாடி வந்தாரு. அதனாலதான் நாங்க பிக் பாஸ் விரும்பி பார்த்தோம். அப்போ பிரதீப்க்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்துச்சு. உள்ளே இருக்கிற போட்டியாளர்கள் ஏதோ பிளான் பண்ணி அவரை வெளியே அனுப்பிட்டாங்க. ஆனால் இதுவரைக்கும் தினேஷ் கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசினதே கிடையாது. அப்படி பேசி நாங்க பார்த்ததும் கிடையாது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் சில நேரங்களில் தினேஷ் சில வார்த்தைகளை பேசி இருக்கிறார். எங்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.” என்றார்கள்.

அதுபோல தினேஷின் கல்யாண வாழ்க்கை பற்றியும் பேசி இருக்கின்றனர், அதில் தினேஷ் ரச்சிதாவை இனி நடிக்க வேண்டாம் என்று சொன்னதால்தான் அவர்களுக்குள்ள சண்டை வந்துச்சு என்று சிலர் சொல்றாங்க. ஆனா அது உண்மையே கிடையாது என்று தினேஷின் அப்பா பேசுகிறார். மேலும் கொரோனா டைம்ல எங்களுக்கு கொஞ்சம் பொருளாதார பிரச்சினை இருந்துச்சு. அந்த டைம்ல ரெண்டு மாசம் வாடகையை கட்ட முடியுமா என்று நாங்கள் கேட்டது தான் ரொம்ப தப்பா போயிட்டு. அதுல வெடிச்ச பூகம்தான்..

யாருடைய பேச்சைக் கேட்டு இப்படி எல்லாம் பண்றாங்கன்னு தெரியல. எனக்கு அந்த விஷயத்தோட மனசு ரொம்ப சங்கடமா போயிட்டு… அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் காதலிச்சு கல்யாணம் பண்ணாங்க.. அதுபோல ரச்சிதா சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பண்ணிக்கிட்டு இருந்தாங்.க ஆனா நாச்சியாபுரம் மட்டும் ரச்சிதாவிற்கு நடிக்க விருப்பமில்லை. அப்போ நாங்க எல்லாரும் சொல்லித்தான் ரச்சிதா நடிச்சாங்க. அதுபோல நாங்க ஒரு நாளும் ரச்சிதா நடிக்க வேண்டாம் என்று தடுத்ததில்லை. அதுபோல எந்த ஷோக்கும் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னது கிடையாது.

ரச்சிதா தான் சமீப காலமாக ரொம்ப மாறிட்டாங்க. அதுபோல ரச்சிதா கிட்ட தினேஷ் எப்போதுமே பணம் கேட்டதில்லை. நீங்க வேணும்னா தினேஷோட பேங்க் அக்கவுண்ட் செக் பண்ணி பாருங்க. தினேஷ் பற்றி ரச்சிதா போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னதெல்லாம் பொய். சிலரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சென்றது கூட எங்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் இதில், எங்களையும் வேதனைக்குள் தள்ளிவிட்டாள் என்பதைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” என்று பேசியுள்ளார்கள்.