அஜித் முகத்தில் கரியை பூசாமல் விடமாட்டேன் நயன்தாரா சபதம்.. ஆட்டத்தை ஆரம்பித்த நயன்தாரா..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாரா நடித்த போது அஜித் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஒரு வித நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. இதனால் அஜித் உடன் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்றார் நயன்தாரா. விசுவாசம் படத்தில் நயன்தாரா நடித்து கொண்டிருந்த போதே அவருடைய இருந்த நட்பை பயன்படுத்தி கொண்டு விக்னேஷ் சிவனுக்கு அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை அஜித்திடம் நேரடியாக கேட்டு வந்துள்ளார் நயன்தாரா.

ஆனால் விக்னேஷ் சிவனின் கடந்த கால சினிமா கேரியரில், அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரிதாக பேசும்படி இல்லை மேலும் இதற்கு முன்பு நயன்தாரா சிபாரிசில் நடிகர் சூர்யாவை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தும், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் தானா சேர்ந்த கூட்டம் என்கின்ற மொக்கை படத்தை கொடுத்து வாய்ப்பு கொடுத்து சூர்யாவுக்கு தோல்வியை பரிசாக கொடுத்தார் விக்னேஷ் சிவன்.

அந்த வகையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தார் அஜித், ஆனால் தொடர்ந்து அஜித்தை தொடர்பு கொண்டு விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்து வந்தார் நயன்தாரா, ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவனை அழைத்து பேசிய அஜித், ஒன் லைன் கதையை மட்டும் கேட்டவர், உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது இந்த கதையை டெவெலப் செய்து, முழு கதைக்கான ஸ்கிரிப்ட், மற்றும் அணைத்து பணிகளையும் தொடங்குகள் என அஜித் தெரிவித்து.

இந்த படத்தை லைக்கா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. துணிவு படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பின் போதே விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித், துணிவு படம் முடிந்த உடனே புதிய படத்தை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில்,

விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து முழு கதையை கேட்ட அஜித், டென்சனின் இந்த குப்பை கதையை தான் ஆறு மாதமாக டெவெலப் செய்திர்களா என அவருடைய கோபத்தை வெளிப்படுத்திய அஜித், இந்த கதையில் என்னால் நடிக்க முடியாது என தெரிவித்துவிட்டார், இந்த தகவல் நயன்தாரா கவனத்துக்கு சென்றதும் அஜித்தை தொடர்பு கொண்டு எவ்வளவோ பேசியும் விக்னேஷ் சிவன் கதையில் நடிக்க மறுத்து விட்டார் அஜித்.

மேலும் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்த விசையத்தை தெரிவித்து இந்த படத்தில் வேறு ஒரு இயக்குனரை ஏற்பாடு செய்யுங்கள் என்று தெரிவித்து விட்டாராம் அஜித், இது தெரியாமல் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி சரி செய்து விடுவோம் என தயாரிப்பு நிறுவனத்தை நயன்தாரா தொடர்பு கொண்டு பேச, அதற்கு அஜித் சாரே இயக்குனரை மாற்ற சொல்லிவிட்டார் என கைவிரித்து விட்டது தயாரிப்பு நிறுவனம்.

தவறுகளை சுட்டி காட்டி அஜித் நினைத்திருந்தால் கதையில் திருத்தம் செய்திருக்கலாம், ஆனால் கணவர் விக்னேஷ் சிவனை ஆறு மாதம் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என அஜித் மீது கோபத்தில் இருக்கும் நயன்தாரா அதிரடியாக சில முடிவுகளை அஜித்துக்காகவே எடுத்துள்ளார், அதில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் கணவர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறாராம்,

மேலும் கணவர் விக்னேஷ் சிவனை ஆறு மாதம் நம்ப வைத்து ஏமாற்றிய அஜித் முகத்தில் கரியை பூசும் விதத்தில் சொந்த தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் இருக்கும் என்றும் விக்னேஷ் சிவனை அலட்சியமாக புறக்கணித்து விட்டோம் என அஜித் நிச்சயம் வருந்துவார் என தனக்கு நெருக்கிய வட்டாரத்தில் சபதம் எடுத்துள்ளாராம் நயன்தாரா. விரைவில் சொந்த தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.