நான் ஆண்ட்டியா …. டென்ஷனான நயன்தாரா கல்லூரி மாணவரிடம் என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவுக்கு மிக பெரிய உச்சத்தில் இருக்கும் போதே தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். நயன்தார தந்தை இந்தியன் விமான படையில் பணியாற்றியவர், அவரது சகோதரர் துபாயில் தொழில் அதிபராக இருக்கின்றார். அடிப்படையில் வசதியனான குடும்பத்தை சேர்ந்தவர் நயன்தாரா.

நயன்தாரா தந்தை விமான படையில் பணியாற்றியதால், தந்தை பணிபுரியும் இடங்களுக்கு ஏற்ப தனது படிப்பை மேற்கொன்டு வந்துள்ளார். அந்த வகையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தார பிறந்தது பெங்களூர், ஆரம்ப கட்ட பள்ளி படிப்பை குஜராத் மற்றும் டெல்லியில் படித்துள்ளார், பின்பு உயர் கல்வியை கேரளாவில் பயின்ற நயன்தார கல்லூரி படிப்பையும் கேரளாவில் முடித்துள்ளார். இப்படி இந்தியாவில் பல்வேறு இடங்களில் தனது படிப்பை முடித்தார் நயன்தாரா.

தமிழில் ஐயா படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமான நடிகை நயன்தார, முதல் படத்திலே ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் மூலம் தமிழகம் முளுவதும் உள்ள பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார், ஆனால் அடுத்தடுத்து சந்தரமுகி, கஜினி போன்ற படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க தான் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழில் அவர் அஜித் , விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருடன் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்கள் தோல்வியை தான் சந்தித்தது.

இதனிடைய பிரபு தேவா உடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின்பு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு எதிர்ப்பாராத வெற்றி கிடைத்து முன்னனி நடிகையானார், மேலும் அவர் நடித்த படங்கள் தொடர் வெற்றியை கொடுத்தது. தன் கைவசம் இன்னும் படங்கள் இருக்கும் போதே திருமணம் செய்துகொண்ட நயன்தாராவுக்கு விரைவில் தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார், 37 வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் நயன்தாரா.

இந்நிலையில் திருமணம் முடிந்து அடுத்த நாள் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்த நயன்தார, மறு வீடு அழைப்பை ஏற்று கேரளாவில் உள்ள தனது தயார் வீட்டுக்கு சென்ற நயன்தாரா, அங்கே பிரசித்திபெற்ற கோவில்களுக்கு சென்று கணவர் விக்னேஷ் சிவனுடன் ஸ்வாமி வழிபாடு செய்து வந்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் நடந்த நயன்தாரா திருமண நிகழ்வில் பங்கேற்க முடியாத நயன்தார சிறு வயது தோழி கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளார்.

நயன்தாரா உறவினர் வீட்டு அந்த பெண் பள்ளி பருவத்தில் இருந்தே நயன்தாராவின் தோழி என்று கூறப்படுகிறது, அவருக்கு கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு பையன் இருக்கிறது, தன்னுடைய பையன் உடன் நயன்தாராவை சந்திக்க சென்ற அந்த தோழி, நீண்ட நேரம் நயன்தாரா உடனான தன்னுடைய சிறு வயது அனுபவங்களை பேசி மகிழ்ந்துள்ளனர், அப்போது தனது தோழியின் மகனிடம் பேசிய நயன்தாரா, அவரை பற்றிய சில கேள்விகளை கேட்டுள்ளார்.

அப்போது அந்த பையன் பதில் சொல்லும் போது, நயன்தாராவை ஆண்ட்டி என்று தொடர்ந்து உச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் நான் ஆண்ட்டி இல்லை அக்கா என்று கூப்பிடு என நயன்தாரா தெரிவித்ததாக கூறப்படுகிறது, இதன் பின்பு ஏதும் பேசாமல் அமைதியாக இருந்த அந்த பையன் அம்மா தோழி தான அவங்க, ஆண்ட்டி என்று கூப்பிட்டால் அவங்களுக்கு என்ன பிரச்சனை என்கிற குழப்பத்தில் நயன்தாரா வீட்டில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது.

தமிழர்கள் வயிற்றில் அடிக்கும் ரஜினிகாந்த்.. கொந்தளிக்கும் சினிமா துறையினர்.. என்ன செய்தார் ரஜினி தெரியுமா.?