அப்படியே திரும்பி பார்க்கமா ஓடி போ… நயன்தாராவை அவமானப்படுத்தி அனுப்பிய இயக்குனர்..

0
Follow on Google News

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது . ஆனால் நயன்தாரா ஆரம்பகால கட்டத்தில் பல ஹீரோக்களுடன் சர்ச்சையில் சிக்கி, தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருந்தாலும், சமீபகாலமாக அதிக சம்பளம் கேட்டு சர்ச்சையில் சிக்கி, பல பட வாய்ப்புகளையும் கை நழுவ விட்டு வருகிறார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகை என்றால் அது நயன்தாரா தான். ஆனால் தற்போது அந்த சம்பளம் போதாது என, நயன்தாரா டபுள் மடங்காக சம்பளத்தை உயர்த்தி உள்ளதால், இயக்குனர்கள் நயன்தாராவை வைத்து படம் எடுக்க மாட்டோம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பது வழக்கம்.

ஆனால், ஹீரோவுக்கு அக்கா கேரக்டரில் நடிப்பதற்கு, நாயகியை விட இரட்டை மடங்கு சம்பளம் ஒரு முன்னணி நடிகை கேட்பது, இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவை. அப்படிதான், நடிகர் மாதவன் நடித்த நளதமயந்தி என்ற படத்தில், ஹீரோயினாக நடித்த கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் டாக்ஸிக். இந்த படத்தில் ஹீரோவாக கே ஜி எஃப் பட நடிகர் யாஷ் நடிக்கிறார்.

அந்த படத்தில் அவரது அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அவர் ஒரு கட்டத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்த படத்திலிருந்து திடீரென விலகி விட்டார், கரீனா கபூருக்கு பதிலாக அந்த கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க, அதாவது ஹீரோ யாஷ் அக்காவாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இந்த படத்தில் அப்படி ஒரு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க, தனக்கு டபுள் மடங்கு சம்பளம் நயன்தாரா கேட்டதாகவும் தகவல் வெளியானது. அதாவது இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புதிய படங்களில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் யாஷ்க்கு, அக்காவாக நடிக்க 20 கோடி ரூபாய் தனக்கு சம்பளம் வேண்டும் என்று நயன்தாரா கேட்டு இருப்பது, படத் தயாரிப்பு குழுவினரை பதைபதைக்க செய்துள்ளது.

என்னதான் இருந்தாலும் ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கவே இருபது கோடி சம்பளம் கேட்பதா என்று இவரை அந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யாமல், வேறு ஹீரோயினை தேடி வருகின்றனர். இதனால் கையில் இருந்த படத்தையும் நயன்தாரா நழுவ விட்டுவிட்டார். மேலும், சமீபத்தில் தான் நடிகர் கவினும், நயன்தாராவும் இணைந்து ஒரு படம் நடிக்கப் போகிறார்கள் என்ற ஒரு போஸ்டர் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது நடிகை நயன்தாராவாலேயே அந்த படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தில் நடிக்கவும் நயன்தாரா 20 கோடி ரூபாய் கேட்டதாகவும், அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில் படம் தொடங்கட்டும், அதன்பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை கேட்டு அந்த படத்தில் ஒரு வாரம் நயன்தாரா நடித்த நிலையில், அவர் கேட்ட சம்பளத்தில் பாதியை மட்டுமே கொடுக்க முடியுமென கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் நடிகை நயன்தாரா கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என இயக்குனர் ஒரே போடாக போட்டுள்ளதால், நயன்தாரா அப்செட்டில் இருப்பதாகவும், அதோடு இவர் அதிக சம்பளம் கேட்டால் கொடுக்க முடியாது என இயக்குனர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படமும் நயன்தாராவிடம் இருந்து கைநழுவும் அபாயத்தில் உள்ளது. இப்படி சம்பளத்தை உயர்த்தி கேட்டுக் கொண்டே இருந்தால் இனி நயன்தாராவால் எந்த படத்திலும் நடிக்க முடியாது என்றும் பல இயக்குனர்கள் எச்சரித்தும் வருகின்றனர்.