திருமணத்தை வியாபாரம் செய்த நயன்தார – விக்னேஷ் சிவன்.. அட..கடவுளே.. என்ன செய்துள்ளார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகின்றனர். போடா போடி இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன். முதல் படம் ஓரளவு வரவேற்பை பெற்று இருந்தாலும் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார், இந்த இடைப்பட்ட காலத்தில் வேலையில்லா பட்டடதாரி படத்தில் நடிங்கர் தனுஷ் உடன் சிறிய வேடத்தில் கூட நடித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அப்போது தனுஷ் உடன் ஏற்பட்ட நெருக்கம், தனுஷ் தயாரிப்பில் புதிய படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது, இந்த படத்தில் நடிகை நயன்தாரவை நடிக்க வைக்க கதை சொல்ல சென்ற விக்னேஷ் சிவன், மேடத்துக்கு கதை பிடிக்குமா.? பிடிக்காத.? என்று தயக்கத்துடன் சென்றவர், சரி ஒரு தடவை நயன்தாராவை நேரில் பார்த்து கதையை மட்டும் சொல்லிட்டு வந்து விடுவோம் என்று சென்ற விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஓகே சொன்னார் நயன்தாரா.

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இவர்கள் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வாழ தொடங்கினர், மேலும் விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், நயன்தாராவுக்கு உதவியாளர், மேனஜர், பாடி கார்ட் என நயன்தாராவுக்கு எல்லாமே விக்னேஷ் சிவன் என்றானார்.

ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவன் அனுமதியில்லாம் நயன்தாராவை பார்க்க முடியாத சூழல் உருவானதை தொடர்ந்து நயன்தாரா படத்தில் நடிக்க விக்னேஷ் சிவன் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கமிஷன் பெற்று வந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 7 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல், ஜோடியாக கோவிலுக்கு செல்வது, ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில்.

வருகின்ற 9ம் தேதி இவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடத்த முடிவு செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, திருமணம் ஏற்பாடுகளுக்கு திருப்பதி சென்று வருகின்ற 9ம் தேதி நடைபெற இருக்கும் திருமண ஏற்பட்டுகளை தொடங்கினார்கள். எங்கே தாலி கட்டுவது. வரவேற்பு நிகழ்ச்சி எங்கே நடத்துவது என்று பரவ்வையிட்டவர்கள், மேலும் சினிமார் ஆர்ட் இயக்குனர் ஒருவரை அழைத்து செட் அமைக்கும் பணிகளையும் தொடங்கினார்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.

மேலும் இவர்கள் இருவரும் ஏற்கனவே நம்ம திருமணம் திருப்பதியில் தான் நடைபெற வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்வை அறிந்த பிரபல OTT நிறுவனம் ஓன்று. இந்த திருமணத்துக்கான அணைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து கொள்கிறோம்,மேலும் உங்கள் திருமண நிகழ்ச்சியை OTT யில் ஒளிபரப்ப உங்களுக்கு பெரும் தொகையை தருகிறோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பதியில் உங்கள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடியாது. அதனால் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து, அதை நாங்கள் படப்பிடிப்பு போன்று எடுத்து OTT யில் வெளியிடுகிறோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உடனே அதிக பணம் வருகிறது என்பதற்காக ஏற்கனவே திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி உடனே அந்த OTT நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவில் கோடி கோடியாக சம்பாரித்தாலும் பண ஆசை இவர்கள் இருவருக்கும் இன்னும் விடவில்லை என்றும், திருமணத்தை கூட விலை பேசி விற்பனை செய்துள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி. திருமணத்துக்கு பின்பு என்னலாம் செய்ய போகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், கடைசியில் பணத்துகாக திருப்பதி வெங்கடாசலபதியை மறந்து விட்டார்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி என்று கூறப்படுகிறது.

தமிழில் இளிச்சவாயனிடம் வெச்சுக்க… எங்ககிட்ட வேண்டாம்.. ஷங்கரை எச்சரித்த தயாரிப்பாளர்.! எதற்கு தெரியுமா.?