ஆரம்பத்திலே கணவரை நிராகரித்த மீனா… மீண்டும் ஏற்று கொண்டதற்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை மீனா 90 காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்து வந்தார், சினிமா நடிகைகளில் எந்த ஒரு நடிகர் உடன் கிசு கிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தவர் நடிகை மீனா, இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே 90 காலகட்டத்தில் இருந்தது, குறிப்பாக பெண்கள் ஆடியன்ஸ், பேமிலி ஆடியன்ஸ் நடிகை மீனாவுக்கு அதிகம், பெரும்பாலும் சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டார் மீனா.

2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மீனா, திருமணம் செய்யும் வரை மலையாள படங்களில் மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வந்தார். 2002ம் ஆண்டுக்கு பின்பு தமிழில் பெரிதாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும் மலையாள படங்களில் பிசியாக இருந்து வந்தார். இருந்தும் அவ்வப்போது தமிழில் தலையை கட்டிவிட்டு சென்றார் நடிகை மீனா.

2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர் பெங்களூரில் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு நநிக்கா என்கிற பெண் உள்ளது, திருமணத்துக்கு பின்பும் நடிகை மீனா தொடர்ந்து நடித்து வந்தார். திருமணத்துக்கு பின்பு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த மீனாவுக்கு மலையாளத்தில் தொடர்ந்து தற்பொழுது வரை பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் திருமணம் முடிந்து 13 வருடம் மகிழ்ச்சியாக சென்ற நடிகை திருமணம் வாழ்க்கையில் மிக பெரிய சோகமான நிகழ்வாக அவருடைய கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக இறந்துள்ளது நடிகை மீனாவுக்கு மட்டுமில்லை திரைத்துறையை சேர்ந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, நடிகர் ரஜினிகாந்த் உட்பட முன்னனி நடிகர்கள் பலர் நேரில் வந்து நடிகை மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகை மீனா அவருடைய கணவர் வித்யாசாகரை ஆரம்பத்திலே நிராகரித்த சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது, சினிமாவில் எந்த ஒரு கிசு கிசுவில் சிக்காத மீனாவுக்கு திருமணம் செய்ய வீட்டில் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர், அப்போது சில வரங்கள் வந்துள்ளது, அதில் வித்யாசாகரும் ஓன்று, வீட்டில் பொருத்தம் பார்த்து அனைத்தும் ஓகே ஆனதும், இந்த மாப்பிள்ளை வேண்டாம் என மீனா நிராகரித்துள்ளார்.

வேறு ஒரு மாப்பிளையை பார்க்கலாம் என மீனாஅவருடைய வீட்டில் தெரிவித்துள்ளார், ஆனால் மீனா அத்தை தான், ஒரு நல்ல மாப்பிளையை நீ மிஸ் பண்ண போகிறாய், என்று மாப்பிள்ளையின் நற்குணங்கள் பற்றி எடுத்து தெரிவித்துள்ளார், இதன் பின்பு வித்யாசாகர் உடன் பேசி பழக தொடங்கியவர், இந்த மாப்பிளை ஓகே என மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளார் மீனா என்றும், இதன் பின்பு இரு வீட்டாரும் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளது குறிப்பிடதக்கது.

மரணத்திற்கு முன்பு கடுமையான மனஉளைச்சலில் மீனா கணவர்… மீனா கணவர் மரணத்தில் உள்ள மர்மம்..!