என்.டி.ஆர் உடன் கனகா நடந்த ரகசிய திருமணம்… பாணத்திற்காக கனகா அம்மா செய்த காரியம்..

0
Follow on Google News

கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கனகா.

2000 ஆண்டுக்கு பின்பு நடிப்பதில் இருந்து விலகிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். திரையுலகில் இருந்து முழுமையாக விலகியதற்கு காதல் தோல்வி, மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இன்றி பாழடைந்தது போல் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார் கனகா . இவருக்கு என உதவியாளர் ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் தனக்கான வேலைகள் அனைத்தையும் அவரே செய்து கொள்வதாகவும் கூறப்பட்டது.

அக்கம் பக்கத்தினரால் கூட எப்போதாவது தான் இவரை பார்க்க முடியுமாம். இந்த சூழலில் தான் கனகாவை சமீபத்தில் குட்டி பத்மினி சந்தித்து பேசியுள்ளார். மேலும் நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில், நடிகை கனகாவுடனான தனது புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவை சந்தித்து மகிழ்ச்சி” என பதிவிட்டார்.

இந்நிலையில் கனகா பற்றி பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் “கனகாவின் அம்மா தேவிகா என்.டி.ராமாராவ்வுடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அப்போது என்.டி.ராமாராவ்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக ஜோசியரிடம் சென்றார். அவர்கள் குறிப்பிட்ட நட்சத்திரம் ராசி உள்ள கன்னி பெண்ணை திருமணம் செய்துகொண்டால் நீங்கள் முதலமைச்சர் ஆகலாம் என்று கூறியுள்ளனர்.

அதனை என்.டி.ஆர் தேவிகாவிடம் கூறியுள்ளார். தேவிகா உடனே, இந்த நட்சத்திரம் ராசி தான் என் பெண் கனகாவுக்கு உள்ளது, அவரை வேண்டுமானால் திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன் படி கனகாவுக்கும் டி.ராமாராவ்க்கும் ரகசிய திருமணம் நடந்தது. திருமணம் மட்டும்தான் செய்துகொண்டார் படுக்கைக்கு எல்லாம் அழைக்கவில்லை. திருமணத்துக்காக ராமாராவ் நிறைய பணம் கொடுத்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

இந்த திருமணம் கனகாவுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது” என்று பேசிய பயில்வான், மேலும் அதன்பின் கனகா, கலிபோர்னியாவைச் சேர்ந்த இன்ஜினியர் முத்துக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டது யாருக்குமே தெரியாது, அதை மிகவும் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த நேரத்தில் தாய் தேவிகா இறந்துவிட்டதால், ஆழ்வார்பேட்டை வீட்டில் தனிமையில் வாழ்ந்தார்.

இவர் தனிமையில் இருப்பதால் பத்திரிக்கையாளர்கள் கனகாவை பேட்டி எடுக்க சென்றோம். அப்போது பேசிய கனகா, கலிபோர்னியாவை சேர்ந்தவரை நான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திடீரென்று அவர் என்னை விட்டு கலிபோர்னியா சென்றுவிட்டார் என்றார். அப்போது, பத்திரிக்கையாளர்கள் அவரின் புகைப்படத்தை கொடுங்கள், காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கேட்டோம்.

அதற்கு கனகா, வாழ மனம் இல்லாமல் போனவர் மீது புகார் கொடுத்து என்ன பயன், அதற்கு நான் தனியாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். இவ்வாறு காதல் தோல்வியால் பல ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கனகா அந்த சிறையை விட்டு வெளியில் வர வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.