ஜோதிகாவின் அட்ராசிட்டி… தேவையே இல்லை என தூக்கி எறிந்த விஜய்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ஜோதிகா, அவருடைய காலகட்டத்தில் அவருக்கும் கடும் போட்டியாக இருந்தவர் நடிகை சிம்ரன். அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருந்த நடிகை ஜோதிகா திருமணம் செய்து கொள்ளும் வரை அவருடைய மார்க்கெட்டை சரிய விடாமல் தக்க வைத்து கொண்டவர்.

நடிகர் விஜய் உடன் குஷி, திருமலை ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த ஜோதிகா. இதில் குஷி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பாராட்டும்படியாக இருந்தது. மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்குது பாடல் ஜோதிகாவை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடையச் செய்தது. குஷி படத்திற்கு முன்பு பல படங்களில் ஜோதிகா நடித்து இருந்தாலும் கூட குஷி படத்திற்கு பின்பு தான் ஜோதிகாவின் சினிமா வாய்ப்புகள் அதிகரித்து அவருடைய மார்க்கெட்டும் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றது.

திருமணத்திற்கு பின்பு சினிமாவில் முழுக்கு போட்டு விட்டு குடும்பத்துடன் செட்டிலான ஜோதிகா, சில வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ- என்ட்ரி கொடுத்தவர், தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெட் படம், மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார் ஜோதிகா. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து ஜோதிகா நடித்து வந்தாலும்.

நடிகை நயன்தாரா நடித்த ஹீரோயின் சப்ஜெட் படமான அரம் பின்பு நயன்தாராவுக்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டும் போன்று ஜோதிகாவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் மெர்சல். இந்த படத்தில் மத்திய பாஜக அரசு குறித்து விமர்சனம் செய்யும் விதத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கடும் சர்ச்சை எழுந்தது.

மேலும் பாஜக தரப்பில் இருந்து மெர்சல் படத்திற்கு எதிராக கடும் எதிப்பு கிளம்ப, அதுவே அந்த படத்திற்கு விளம்பரமாக உருவெடுத்து வெற்றி அடைய செய்துவிட்டது.மெர்சல் படத்தில் நடிகர் மூன்று கெட்டப்பில் நடித்து இருப்பார், ஓன்று தந்தை கேரக்டர், மற்று இரண்டு மகன் கேரட்டர், இதில் தந்தை விஜய்க்கு ஜோடியாக நித்தியாமேனன் மற்றும் இரண்டு மகன்களுக்கு ஜோடியாக சமந்தா , காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து இருப்பார்கள்.

இதில் நடிகை நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட்டாகி இருந்தவர் நடிகை ஜோதிகா. படத்தில் கமிட்டாவதற்கு முன்பு இயக்குனர் அட்லீயிடம் படத்தின் கதையை கேட்ட நடிகை ஜோதிகா, படத்தில் நடிப்பதற்கான கால் சீட் கொடுத்துள்ளார். மெர்சல் படத்தில் படப்பிப்பில் இரண்டு நாட்கள் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா அவர் நடிக்கும் காட்சிகளில் நடித்து வந்துள்ளார்.

ஆனால் இயக்குனர் அட்லீயிடம் அவருடைய கதாபாத்திரதத்தில் சில மாற்றங்கள் செய்ய வலியுறுத்தியுள்ளார் ஜோதிகா, அதற்க்கு மாற்றம் செய்தால் கதையில் பல குளறுபடி ஏற்படும் என்று தெரிவித்து ஜோதிகாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் அட்லீ. ஆனால் பிடிவாதமாக ஜோதிகா தனக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என ஜோதிகா உறுதியாக இருக்க, அதற்கு படம் வெளியான பின்பு பாருங்கள் நிச்சயம் உங்கள் கேரட்டர் பெரும் பாராட்டை பெரும் என ஜோதிகாவை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார் அட்லீ.

ஆனால் பிடிவாதமாக என்னுடைய கேரக்டரில் மாற்றம் இல்லை என்றால் இந்த படத்தில் இருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்து விட்டு நடிகர் விஜய்யிடம் கூட ஏதும் சொல்லமால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறியுள்ளார் ஜோதிகா.இந்த தகவல் விஜய் கவனத்திற்கு சென்றது, அட்லீயை அழைத்து முழு விவரமும் தெரிந்த கொண்ட விஜய், படத்தில் கமிட்டாவதற்கு முன்பே கதையை கேட்டுவிட்டு தானே கமிட்டானார், பின்பு இப்ப வந்து கதையில் மாற்றம் செய்ய வேண்டுமானால் என்ன அர்த்தம் என ஜோதிகா மீது உள்ள கோபத்தை அட்லீயிடம் தெரிவித்துள்ளார் விஜய்.

அதற்கு ஜோதிகாவை சமாதனம் செய்து அழைத்து வரலாம் என அட்லீ தெரிவிக்க, அதெல்லாம் வேண்டாம், ஒரே இந்த படத்தில் இருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துவிட்டு சென்ற பின்பு இனி அவரே திரும்ப வந்தாலும் வேண்டாம் வேறு ஒரு நடிகையை நடிக்க வைங்க என அட்லீக்கு உத்தரவு போட்டுள்ளார் விஜய். இதன் பின்பே ஜோதிகா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகை நித்தியாமேனன் மெர்சல் படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.