கர்ப்பம் அடைந்த பின்பு தான் அமலாபால் திருமணம்… பரபரப்பு தகவலை வெளியிட்ட சினிமா பிரபலம்…

0
Follow on Google News

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அமலாபாலை, அமலாபால் குறித்து அவர் பகிர்ந்த பல்வேறு விஷயங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை அமலாபால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தாலும், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் தமிழில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

நடிகை அமலாபால் 2014 ஆம் ஆண்டு தலைவா படத்தின் இயக்குனரான A.L விஜய்யை மணம் முடித்தார். ஆனால், மூன்று ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவர் இடையே ஏற்பட்ட மணக்கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடித்த போது, தனுஷ் – அமலாபால் இருவரையும் இணைத்து வைத்து கிசுகிசு செய்திகள் மிக பரவலாக வெளியானது.

அந்த காலகட்டத்தில் அமலாபால் மற்றும் தனுசுக்கு இடையிலான கிசுகிசுக்கள் விவகாரம் தான் அமலாபால் – AL விஜய் விவாகரத்துக்கு காரணம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது, இந்த விவகாரம் தனுஷ் குடும்பத்தில் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்று கூட கூறப்பட்டது.இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு, முழுவதுமாக படங்களில் நடிப்பதற்கு களமிறங்கிய அமலா பாலுக்கு அடுத்தடுத்து ஓரிரு படங்கள் ஹிட் கொடுத்தது.இருப்பினும், அமலா பாலுக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை,

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்காக கிளாமரில் இறங்கிய அமலாபால்க்கு, கிளாமரும் கைகொடுக்க வில்லை. மேலும் சொந்தமாக ஒரு படத்தையும் தயாரித்தும் தோல்வியை தான் தழுவினார் நயன்தாரா. இந்நிலையில் அவருக்கு கிளாமரும் கைகொடுக்கவில்லை, சொந்தமாக தயாரித்த ஒரு படமும் தோல்வியை தழுவி, மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது.

இதன் பின்பு கடும் மன உளைச்சலுக்கு ஆளான அமலாபால், தன்னுடைய மன அமைதிக்காக ஆன்மீகம் பக்கம் சென்றார். யோகா, ஆன்மீகம் என தன்னை முழுமையாக ஆன்மீகம் பக்கம் அர்ப்பணித்து கொண்ட அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பரான ஜகத் தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அமலாபால் கர்ப்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், திருமணத்துக்கு முன்னர் ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த அமலாபால்,

ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே அது நடந்து கர்ப்பம் ஆகியிருப்பாரோ என சந்தேகம் வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதாவது, திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால்தான் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் யூ ட்யூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.