சித்தார்த்தை இரண்டாவது திருமணம் செய்யும் அதிதி… ஏற்கனவே சித்தார்த்க்கு குழந்தை இருக்கு தெரியுமா.?

0
Follow on Google News

பாய்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சித்தார்த், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக பாய்ஸ் படத்திற்கு பிறகு தெலுங்கில் படுபீக்கில் இருந்த இவர், ஒருமுறை, செய்தியாளர் சந்திப்பில் ஏடாகூடமாக ஒரு கேள்விக்கு பதில் சொல்ல, ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவும் அவருக்கு எதிராக திரும்பியது. இதனால், சித்தார்த் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

அதன்பின்பு தமிழில் அவரை மீண்டும் தூக்கிவிட்ட படம் என்றால், சமீபத்தில் வெளியான சித்தா படம்தான். சித்தா படத்தின் வெற்றியால், அவரின் மார்க்கெட் தமிழில் மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில்தான் இவர் சமீபத்தில் நடிகை அதிதி ராவை நிச்சயம் செய்து கொண்ட நிலையில், சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருக்கிறது என்றும், அவருக்கு ஒரு மகனே இருக்கிறார், அவரின் முதல் மனைவி யார் என்ற பல தகவல்களும் வெளியாகியுள்ளது.

நடிகர் சித்தார்த்துக்கு 44 வயதானாலும் இன்று வரை young லுக்கில் இருப்பதால், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அதுதான் இல்லை. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. முதலில் இயக்குனராக மாற வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருந்த சித்தார்த், மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

அதோடு இவர் சினிமாவில் என்ட்ரி ஆன காலகட்டத்தில் இருந்தே பல நடிகைகளுடன் காதலில் விழுந்திருக்கிறார். சமீபத்தில் தான், இவர் பாலிவுட் நடிகையான அதிதி ராவை காதலித்து வருகிறார் என்ற செய்திகள் வெளியானது. அப்போது இருவரும் திருமண நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சி என, பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்ததால், சித்தார்த்துக்கும், அதிதி ராவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லப்பட்டது.

அதன்பின்பு தான் இருவரும், திருமணம் ஆகவில்லை, We are engagement என நிச்சயமாகிய செய்தியை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தான் தற்போது, சித்தார்த், நடிகை அதிதி ராவை உண்மையாக எல்லாம் காதலித்திருக்க மாட்டார், இவர் அதிதியை திருமணம் செய்வதற்கு காரணமே, எப்படி தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் அதிகமாக இருக்கிறதோ, அதை போல் பாலிவுட்டிலும் தனது மார்க்கெட்டை உயர்த்துவதற்காக தான் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் நடிகர் சித்தார்த் கிசுகிசுக்களில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையில்லை. ஏற்கனவே மூன்று பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். முதலில் பாய்ஸ் படத்திற்கு பிறகு பிரபலமான இவர், ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து நடித்த போதே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இதை அடுத்து மேலும் நடிகை சமந்தாவுடன் சேர்ந்து சித்தார்த் நடித்த போதும், இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதனால் இவருக்கு அப்போதே பலரும், பிளேபாய் என்ற முத்திரையை குத்தி வைத்திருந்தனர். அந்த சூழலில் தான், இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி, ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சித்தார்த் திரைத்துறைக்குள் வருவதற்கு முன்பே மேகனா நாராயணன் என்ற பெண்ணை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நான்கே ஆண்டுகளில் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் டீனேஜில் ஒரு மகனே இருப்பதாக என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் முதலில் மேக்னா நாராயணன், பிறகு ஸ்ருதிஹாசன், அடுத்தது சமந்தா, இப்போது கடைசியில் அதிதி ராவ் என பல பெண்களை காதலித்திருப்பதால், இவர்தான் பக்காவான பிளேபாய் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதோடு நடிகை அதிதி ராவும் தனது 21 வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் இவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தான் சித்தார்த்தும் விவாகரத்தானவர், அதிதிராவும் விவாகரத்தானவர் என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் சித்தார்த் அதிதி ராவை திருமணம் செய்வதற்கு காரணம், பாலிவுட்டிலும் இவர் கால் பதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.