ஏழைகள் வயிற்றில் அடிக்கும் யோகி பாபு…. வடிவேலு போன்று ஆணவத்தில் அழிவை நோக்கி யோகிபாபு.!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உச்சகட்ட காமெடி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் வடிவேலு, பலவருடங்கள் கடுமையான போராட்டத்துக்கு பின்பு வாய்ப்புகளை பெற்ற காமெடி நடிகர் விவேக், சூரி போன்ற நடிகர்கள் மத்தியில், குறுகிய காலத்தில் சினிமாவில் நுழைந்து உச்சத்தை எட்டியவர் நடிகர் வடிவேலு. ஆனால் எந்த நிலைக்கு சென்றாலும் வந்த நிலை மறவாதே என்கிற தத்துவத்துக்கு எதிரானவரானார் வடிவேலு, அதுவே அவரை சினிமாவில் அழிவை நோக்கி தள்ளியது.

நடிகர் ராஜ்கிரண் கருணையில் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்ற வடிவேலு, ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் மனம் வருந்தும்படி நடந்து கொண்டுள்ளார், ராஜ்கிரண் பண கஷ்டத்தில் இருக்கிறார், நான் தான் உதவி செய்துள்ளேன் என வெளியில் அரசல் புரசலாக தெரிவிக்க, இது ராஜ்கிரண் கவனத்துக்கு வந்ததும் மிகவும் வருத்தப்பட்டு தன்னை இப்படி அசிங்கப்படுத்தி வருகிறானே வடிவேலு என மிகுந்த வேதனை அடைந்துள்ளார் ராஜ்கிரண்.

மேலும் ஒரு கட்டத்தில் மிக பெரிய உச்சத்துக்கு வந்த வடிவேலு, அவருக்கென உதவியாளர்கள், துணை நடிகர்களை அருகில் வைத்து கொண்டார், ஆனால் துணை நடிகர்கள் தன்னை ஓவர் டேக் செய்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தால் போதும், சம்பளம் கொடுத்ததை கொடுக்க என கேட்டு வாங்கி நடித்த வடிவேலு, பின்பு ஒரு நாள் கால் சீட்டுக்கு இவ்வளவு சம்பளம் என நிர்ணயம் செய்தார்.

மேலும் தனது உதவியாளர், மற்றும் தன்னுடன் இணைந்து காமெடி கட்சியில் நடிக்கும் துணை நடிகர்களுக்கு தனியாக சம்பளத்தை தயாரிப்பு நிறுவனத்திடம் தினமும் வாங்கி கொள்வர் வடிவேலு என்றும், ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் உதவியாளர்கள், மற்றும் தன்னுடையா துணை நடிகர்களுக்கு அதிக பணத்தை பெற்று கொண்ட வடிவேலு, அவர்களுக்கு 500 அல்லது 1000 என்று கொடுத்து பாவம் அவர்களின் வயிற்றில் அடிப்போது போன்று நடந்து கொள்வார் வடிவேலு என கூறப்படுகிறது.

இது தெரிந்தும், எதாவது வடிவேலிடம் கேட்டால், எங்கே வாய்ப்பு கொடுக்காமல் விரட்டி விடுவார் என, வடிவேலு கொடுப்பதை வாங்கி கொண்டு அவருடன் வேலை பார்த்து வந்துள்ளனர், அவருடைய உதவியாளர்கள். இந்நிலையில் வடிவேலு பார்முலாவை தற்பொழுது கையில் எடுத்துள்ள காமெடி நடிகர் யோகி பாபு, தன்னுடைய உதவியாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் நேரடியாக சம்பளம் தரவேண்டாம், என்னிடம் கொடுக்க நான் அவர்களுக்கு தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் வடிவேலு போன்றே பெரும் தொகையை உதவியாளர் சம்பளம் என பெற்று கொண்ட யோகி பாபு, தனது உதவியாளர்களுக்கு , மிக சிறிய தொகையை கொடுத்து ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது போன்று பாவம் அப்பாவி ஏழைகள் வயிற்றில் அடித்தால் வடிவேலு போன்று சினிமாவில் அழிந்து போய் விடுவார் யோகி பாபு என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டென்ஷனான அஜித்…  கண்ட நாய்கள் எல்லாம் அட்வைஸ் பண்ணுவதா… என்ன நடந்தது தெரியுமா.?