பத்து பெண்களுடன் உடலுறவு… வில்லன் நடிகர் பகீர்…. சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த்…

0
Follow on Google News

நடிகர் ரஜினி நடிப்பில் தற்பொழுது வெளியாகி திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர்,இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகம், இதற்கு முன்பு விஷால் நடித்த திமிரு, தனுஷ் நடித்த மரியான், சிலம்பரசன் நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் போன்ற படங்களில் வில்லன் நடிகராக நடித்தவர்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் விநாயகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாடலிங் துறையை சார்ந்த மிருதுளா தேவி என்பவர் இவர் மீது பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விநாயகனை அழைத்தபோது, தன்னையும் தன்னுடைய தாயாரையும் அவருடைய விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆபாசமாக பேசியதாக விநாயகன் மீது கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார் மாடலிங் துறையை சேர்ந்த மிருதுளா தேவி.

இதனை தொடர்ந்து மலையாள சினிமா வில்லன் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து கேரளா போலீசார் கைது செய்தனர். பின்பு நீதிமன்றம் மூலம் ஜாமினின் வெளிவந்த விநாயகன் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,மாடலிங் மிருதுளா தேவி தன் மீது தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் வில்லன் நடிகர் விநாயகன். இது கேரள சினிமாவில் மிக பெரிய அவப்பெயரை விநாயகனுக்கு பெற்று தந்தது.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய விநாயகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது, நான் திருமணத்திற்கு முன்பு 10 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன், அவர்களின் அனுமதி பெற்று தான் உறவு வைத்தேன் என்று தெரிவித்த விநாயகன். அங்கிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை கைநீட்டி இந்த பெண்ணுடன் நான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால், நேரடியாக இந்த பெண்ணிடம் கேட்பேன், ஆனால் இவர் முடியாது என்று சொல்வார்.

ஆனால் என்னுடன் பழகிய பெண்களை, நான் பாலியல் உறவுகளுக்கு அழைத்த போது, அவர்கள் யாரும் மறுப்பு சொல்லவில்லை என்று வில்லன் நடிகர் விநாயகன் பேசியது ஒட்டுமொத்த மலையாள சினிமா துறையினர் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. மேலும் விநாயகம் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருடைய மனைவி பப்பித்தவை விவாகரத்து செய்து விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில பாலியல் புகாரில் சிக்கியுள்ள விநாயகனுக்கு எதிராக கேரள மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு குரல் எழுந்தது மட்டுமில்லாமல், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விநாயகன், தான் மாடலிங் துறையை சேர்ந்த ஒரு பெண் தெரிவித்த பாலியல் குற்றத்தை ஒப்பு கொண்டு, மேலும் தான் 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துளேன் என பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகருக்கு ரஜினியின் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது கேரளா ரசிகர்கள் மத்தியில் ஆங்காங்கே எதிர்ப்புகள் வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விநாயகம், அவர் மீது வந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்பு, அவர் பகிரங்கமாக 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என் பேசியது, மேலும் பெண் பத்திரிகையாரிடம் அநாகரிகமாக கேள்வி எழுப்பியது போன்ற பல சர்ச்சைகளால், மலையாள சினிமாவில் மிக பெரிய பின்னடைவை சந்தித்து வந்த விநாயகத்திற்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது ஜெயிலர் படம்.

இந்நிலையில் ஒரு பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகருக்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து, சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு செல்ல காரணமாக, ரஜினி சார், நீங்களே இப்படி செய்யலாமா.? என மலையாள ரசிகர்கள் ஜெயிலர் படம் வந்த பின்பு கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கது.