பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனத்திடம் விக்ரம் பிடிவாதம்… எங்களை ஏமாற்ற வேண்டாம்..

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி நாவலை தழுவி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாதத்திற்காக சுமார் ஒரு மாதம் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்தப் படத்தின் நடிகர் நடிகர்கள் தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிசியாக இருந்து வருகிறார்கள்.இரண்டாம் பாகத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் அந்த மாணவர்கள் முன்னிலையில் இந்த படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடத்தி முடித்த பொன்னியின் செல்வன் படகு குழுவினர். அதன் பின்பு டெல்லியில் உள்ள பஸ்ரீ ராம் ககல்லூரியில் இவர்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.

இந்த ஸ்ரீராம் கல்லூரி தான் மாஸ்டர் படத்தின் விஜய் நடிக்கும் கல்லூரி காட்சிகள் படமாக்கப்பட்ட இடம். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக தனி விமானத்தில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பறந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இதுபோன்ற விமானத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்கின்ற திட்டமே தயாரிப்பு நிறுவனத்திடம் இல்லையாம்.

ஆனால் நடிகர் விக்ரம் பிடிவாதமாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலேயே பல கோடி லாபம் பார்த்து விட்டீர்கள், அதனால் அதனால் சேட்டட் விமானத்தை தங்களுக்கு ப்ரமோஷன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார், மேலும் எங்களை ஏமாற்றி விட வேண்டாம் என கிண்டலுடன் தெரிவித்திருக்கிறார் விக்ரம்.

நடிகர் விக்ரம் ஆசைக்கு ஏற்ப பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சாட்டர் விமான ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இருந்தும் இந்த விமானத்தின் வாடகை பில்லு மட்டும் எக்கு தப்பாக எகிறி வருவதாக கூறப்படுகிறது.