விக்ரமை மரியாதையை இல்லாமல் நடத்திய பா.ரஞ்சித்…. கண் கலங்கிய பாலா.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விக்ரம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி சுமார் பத்து வருடங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும், விக்ரம் என்கின்ற ஒரு நடிகர் இருப்பதே பலருக்கு தெரியாமல் இருந்தது. அந்த வகையில் ஒரு வெற்றிக்காக மிக வெறித்தனமாக போராடிக் கொண்டிருந்தார் விக்ரம்.அதே காலகட்டத்தில் கதையை கையில் வைத்துக்கொண்டு படம் இயக்குவதற்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தார் பாலா.

தன்னுடைய ரூம் மேட் ஆன நடிகர் விக்னேஸை வைத்து முதன் முதலில் சேது படத்தை அகிலன் என்கின்ற பெயரில் அந்த படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே அந்த படம் கைவிடப்பட்டது. இதன் பின்பு சேது படத்தை எடுக்க தயாரிப்பாளர் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த பாலாவுக்கு சேது கந்தசாமி என்கின்ற தயாரிப்பாளர் அறிமுகமானார்.

இதன் பின்பு அதே படத்தில் தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகர் வேண்டும் என பாலா தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பல திறமைகள் இருந்தும் சரியான கதை இல்லாமல் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த விக்ரமை தேர்வு செய்தார் பாலா. ஆனால் சேது படத்தில் விக்ரம் நடிப்பதற்கு முன்பே பாலா இந்த படத்தில் நடிக்க நீ பல சிரமங்களை சந்திக்க வேண்டும் என்று கண்டிசனம் போட்டுள்ளார் பாலா.

என்னையே நான் அர்ப்பணிக்க தயார் என்று விக்ரம் உறுதியளிக்க சேது படப்பிடிப்பு தொடங்கியது. விக்ரம் கல்லூரி மாணவராகவும் பின்பு காதல் தோல்வி அடைந்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார் விக்ரம். பைத்தியமாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உடம்பு மெலிந்து காணப்பட வேண்டும் என்பதற்காக சில நாள் பட்டினி கிடக்கச் சொல்லியுள்ளார் பாலா. விக்ரமும் பட்டினி இருந்து தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு படத்தில் நடித்துள்ளார்.

கல் நெஞ்சம் படைத்த பாலா எளிதில் இளகும் மனம் படைத்தவர் கிடையாது, அப்படி இருக்கையில் சேது படத்தில் படப்பிடிப்பின் போது, மனநலம் பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடிக்கும் ஒரு காட்சியில், விக்ரம் எச்சில் இலை மீது கிடப்பார் அந்த காட்சி படமாக்கப்படும் போது, விக்ரமின் நடிப்பை பார்த்து, இப்படி ஒரு நடிகனா என்று கல் நெஞ்சம் படைத்த பாலா ஒரு நிமிடம் கண் கலங்கி போனாராம்.

சேது படத்தை எடுத்து முடித்துவிட்டு அந்தப் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக அந்த படத்தின் போட்டோ ஸ்டில்களை எடுத்துக் கொண்டு பல பத்திரிகையாளர்களை சந்தித்து பாலா நேரடியாக கொடுத்து வந்துள்ளார். மேலும் அந்தப் படத்தின் பிரிவியூ சோ பலருக்கு போட்டு காண்பித்தும். படம் பார்த்த விநியோகஸ்தர்கள் எல்லோரும் படம் நன்றாக இருக்கிறது, ஆனால் படம் ஓடாது என்றே தட்டி கழித்துள்ளனர்.

இப்படி கடும் போராட்டத்திற்கு பின்பு திரைக்கு வந்த சேது படத்திற்கு பின்பு விக்ரம் என்கின்ற ஒரு கலைஞன் இருப்பதை உலகம் அறிந்தது அதன் பின்பு, தில், தூள், ஜெமினி, சாமி என மிகப் பெரிய ஹிட் கொடுத்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய உச்ச நடிகரான நடிகர் விக்ரம் சமீபத்தில் கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தந்து மிகப்பெரிய சரிவில் உள்ளார் விக்ரம்.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி விக்ரமுக்கு மிக பெரிய பாராட்டை பெற்று தந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் பொழுது அடிக்கடி இயக்குனர் பா ரஞ்சித்திடம் சந்தேகங்களை கேட்டுக் கொண்டே வந்துள்ளார் விக்ரம், அடுத்தது என்ன.? அடுத்தது என்ன? என அந்த கதை குறித்தும், காட்சிகள் குறித்தும் அதிகமாக சந்தேகங்களை கேட்டுக் கொண்டு வந்துள்ளார் விக்ரம்.

ஒரு கட்டத்தில் கடுப்பான பா.ரஞ்சித் தன்னுடைய உதவியாளரை அழைத்து இவரிடம் உங்களுடைய சந்தேகங்கள் அனைத்தையும் கேளுங்கள், இவரிடம் நான் கேட்டு அதற்கான பதிலை உங்களுக்கு தயார் செய்து தருகிறேன். தொடர்ந்து நீங்கள் என்னை கேள்வி கேட்டு வருவதால் எனக்கு எரிச்சல் ஊட்டுகிறது என்று பா ரஞ்சித் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இப்படி சிறு சிறு உரசல்கள் இயக்குனர் பா ரஞ்சித்துக்கும் விக்ரமுக்கும் தாங்கலான் படப்பிடிப்பின் போது நடந்தாலும் அதை பெரிது படுத்தாமல் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் அந்த படத்தில் அர்ப்பணிப்போடு நடித்து கொடுத்துள்ளார் விக்ரம் என்கின்றது சினிமா வட்டாரங்கள். அந்த வகையில் நீண்ட வருடமாக சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை தங்கலான் படத்தின் மூலம் நிலை நிறுத்தி மீண்டும் சினிமாவில் முன்னணி வரிசையில் நட்சத்திரமாக ஜொலிபார் விக்ரம் என்கின்ற சந்தேகம் சிறிதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது தங்கலான் படத்தின் டீசர்.

இதை செய்ய விஜய் என்ன முட்டாளா..? அப்பாவி ரசிகர்களுக்கு ஆல்வா கொடுக்கும் விஜய்..