விஜய்காந்த் மரணம்… அஜித் பெயரை காப்பாற்ற நடந்த டுபாக்கூர் வேலை… அம்பலமாகி அசிங்கப்பட்ட அஜித்..

0
Follow on Google News

கேப்டன் விஜயகாந்த் மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தமிழக மக்கள் பெருமபாலானோர், கேப்டன் மறைவின் காரணமாக இந்த வருடம் ஆங்கில புத்தாண்டை கொண்டாடவில்லை, இது பல இடஙகளில் புத்தாண்டு கொண்ட்டாட்டம் வழக்கத்துக்கு மாறாக களையிழந்து இருப்பதை பார்க்க முடிந்தது அந்த அளவுக்கு தமிழக மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் வள்ளலாக வாழ்ந்து விஜயகாந்த்.

ஆனால் தமிழ் திரையுலகை வாழ வைத்த விஜயகாந்த் மரணம் அடைந்த போது எட்டி கூட பார்க்காத, அவரால் வாழ்வு பெற்ற நடிகர்கள், வெளிநாடுகளில் நியூ ஏர் கொண்டாட்டத்தில் பிசியாக இருந்தனர், தற்பொழுது நியூ இயர் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நடிகர்கள், இனி சென்னை திரும்பியதும் சோகமாக முகத்தை வைத்து கொண்டு விஜய்காந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவிக்கும் புகைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் பிசியாக இருந்த நடிகர்கள் பலர் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் கூட ஒரு இரண்டு வரியில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது, எந்த மாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்கிற என்ன தோன்றும் அளவுக்கு நன்றி உணர்வு சிறிதும் இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு உள்ளது நடிகர்களின் செயல்படுகள்.

இதில் நடிகர் விஷால் மற்றும் சூர்யா இருவரும் வீடியோ வாயிலாக இரங்கல் தெரிவித்து இருந்தனர். இதில் நடிகர் சூர்யா ஒரு இடத்தில் நின்று கூட இரங்கல் தெறிக்க முடியாத அளவுக்கு பிசியாக அப்படி எங்கே தான் செல்கிறோரோ என்று கேட்கும் அளவுக்கு, காரில் பயணித்து கொண்டிருக்கும் போதே இரங்கல் வீடியோ பேசி வெளியிட்டது, இது தான் நீங்கள் கேப்டன்னுக்கு செய்யும் நன்றியா.? என சூர்யாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பல முன்னணி நடிகர்கள் விஜயகாந்த் மறைவுக்கு மரியாதை செலுத்த வரவில்லை என்றாலும்,கூட மூத்த நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ் மற்றும் விஜய் போன்றோர் நேரில் வந்து கண்கலங்கி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் அஜித் எங்கே என பலரும் க்ளெவி எழுப்ப, திடீரென யார் கிளப்பி விட்டார்களோ தெரியவில்லை அஜித் போனில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் மனைவிக்கு இரங்கல் தெரிவித்ததாகவும்.

தற்பொழுது அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால், விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. சென்னை வந்ததும் நேரில் வந்து உங்களை பார்க்கிறேன் என அஜித் போனில் விஜயகாந்த் மனைவியிடம் பேசியதாக பரவி வரும் செய்தி உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜயகாந்த் PRO ஒருவரை தொடர்பு கொண்ட அஜித் மேனஜர் சுரேஷ் சந்திரா,

அஜித்குமார் வெளிநாடுகளில் உள்ளார், அதனால் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவரால் வர முடியாது, அதனால் இரங்கல் தெரிவித்து குறு செய்தி ஒன்று அஜித் அனுப்பி வைத்துள்ளார், அதை விஜயகாந்த் மனைவிக்கு பார்வார்ட் பண்ண வேண்டும் என சுரேஷ் சந்திரா தெரிவிக்க, அதற்கு சார் விஜயகாந்த் உடல் அருகே பிரேமலதா இருக்காங்க, நான் தொலைவில் உள்ளேன், கூட்டத்துக்குள் என்னால் செல்ல முடியாது என விஜயகாந்த் PRO பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் அஜித் குமார் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தன்னுடைய மேனஜர் சுரேஷ் சந்திராவுக்கு அனுப்பிய குறு செய்தியை, அதுவும் அந்த குறு செய்தி உண்மையிலே அஜித் தான் அனுப்பினரா.? அல்லது அஜித் பெயரை காப்பாற்ற அவருடைய மேனஜரே அவர் அனுப்பியது போன்ற ஒரு குறு செய்தியை தயார் செய்ததாக என்று கூட தெரியவில்லை என புலம்பும் சினிமா வட்டாரத்தினர்.விஜயகாந்த் மனைவிக்கு அஜித் போன் செய்து பேசவே என கூறப்படுகிறது.