பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த விஜய்… மணிரத்தினத்திடம் என்ன சொன்னார் விஜய் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அதிக பண செலவில், சுமார் 500 கோடி பட்ஜெட்டில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படம் பாகுபாலி போன்று மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது என்று விளம்பர செய்யப்பட்டாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. பேன் இந்தியா படம் என்று கூறப்பட்டாலும் தமிழ் நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டது கூட தெரியாத நிலை தான் உள்ளது.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியானது. டீசர் வெளியான அன்று ஒரு நாள் மட்டும் பரபரப்பாக பேசப்பட்டது தவிர, அடுத்த இந்த படம் எப்போது வரும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இல்லை. மேலும் டீசர் வெளியாவதற்கு முன்பு இருந்த வரவேற்பு கூட டீசர் வெளியான பின்பு இந்த படத்துக்கு தான் இந்த பில்டப்பா என்கிற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது..

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க பல முன்னனி நடிகர்களை அணுகியுள்ளார் மணிரத்தினம், ஆனால் அவர்கள் கதையை கேட்ட பின்பு இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகிறது. முதலில் நடிகர் சிம்புவை அணுகி இந்த படத்தில் நடிக்க கால் சீட் கேட்டுள்ளார், அதற்கு சிம்புவும் ஓகே சொல்ல, இதன் பின்பு திரிஷா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் நயன்தாராவிடம் பேசி உள்ளார் மணிரத்தினம்.

ஆனால், இந்த படத்தில் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என நயந்தாரா மறுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த சிம்பு பரவாயில்லை சார், நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று தானாக முன்வந்து விலகிக் கொண்டார் சிம்பு. ஆனால் இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்கவில்லை. மேலும் இந்த படத்தின் கதையை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிடம் தெரிவித்துள்ளார் மணிரத்தினம்.

படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்ன மகேஷ்பாவு. படத்தை காட்சிப்படுத்தும் விதத்தை விளக்கி மணிரத்தினம் சொன்னதும் மகேஷ்பாவுக்கு திருப்தி இல்லாமல் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. இதன் பின்பு நடிகர் விஜயை சந்தித்து இந்த படத்தின் கதையை தெரிவித்துள்ளார் மணிரத்தினம். படம் மிகப்பெரிய பட்ஜெட், தமிழ் மன்னர்களின் வரலாற்றை சொல்லும் படம் என படத்தின் கதையை சொல்லியுள்ளார் மணிரத்தினம்.

கதையை கேட்டு முதலில் ஓகே சொன்ன விஜய் இதன் பின்பு படத்தின் காட்சிகள் படமாக்கும் விதம் மற்றும் காட்சிகளை மணிரத்தினம் விளக்கி சொன்ன போது. சாரி சார், நீங்க கேட்கும் அளவுக்கு அதிக நாள் கால்சீட் என்னால் கொடுக்க முடியாது. மேலும் எனக்கு இந்த கெட்டப் செட் ஆகாது என பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய் என கூறப்படுகிறது.

நீங்க தான் காப்பாத்தணும்.. ராஜமௌலியிடம் கெஞ்சி கூத்தாடும் மணிரத்தினம்… எதற்கு தெரியுமா.?