தொலைச்சு புடுவேன்… படப்பிடிப்பில் கடும் கோபத்தில் விஜய்… பயத்தில் லைட் மேன் என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் பொதுவாக பொது இடங்களில் மிகவும் அமைதியாக இருக்க கூடியவர். படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தவுடன் அமைதியாக சென்று தனியா அமர்ந்து விடுவார் அல்லது அவருடைய கேரவன் உள்ளே சென்று விடுவார். பெரும்பாலும் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் விஜய். வில்லு படம் வெளியான போது பத்திரிகையாளர் சந்திப்பு போது விஜய் பேசிக் கொண்டிருக்க, ஒருவர் குறுக்கே பேசிய போது விஜய் கோபப்பட்டு பேசிய வீடியோ ஒன்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயின் திருமணத்தின் போது அவருடைய தந்தை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார், அப்போது விஜய் இடையில் வந்த தந்தையுடன் இணைந்து பத்திரிகையாருக்கு விஜய் பேட்டி கொடுத்த போது, பத்திரிகையாளர் ஒருவர் எடக்கு முடக்காக கேள்வி கேட்க அப்போது கடுமையாக கோபப்பட்டார் விஜய், இப்படி அவருடைய வாழ்க்கையில் எப்பவாதவாது தான் விஜய் கோபப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது வாரிசு படப்பிடிப்பில் விஜய் நடந்து கொண்ட விதம் ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளத்தையும் நடுங்கச் செய்துள்ளது. வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே எனத் தொடங்கும் பாடலை விஜய் தன்னுடைய சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடலை தீபாவளி அன்று வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த பாடல் படமாக்கப்பட்ட போது அங்கே பணியாற்றியவர்கள் மூலம் தொலைபேசியில் எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலானது.

இது ஒட்டுமொத்த வாரிசு படத்தின் படகுழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் விளம்பரத்திற்காக தான் இது போன்ற பட குழுவினரே லீக் அவுட் செய்கிறார்கள் என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்து நிலையில், அது உண்மையில்லை என உறுதியாகியுள்ளது. இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது மேலே இருந்து யாரோ ஒரு லைட்மேன் தான் தொலைபேசியில் பதிவு செய்து லீக் செய்திருக்க வேண்டும்.

இந்நிலையில் பாடல் லீக் ஆன அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு வந்த விஜய் அனைத்து லைட்மேன்களையும் அழைத்துள்ளார், யார் இந்தப் பாடலை செல்போனில் பதிவு செய்து லிக் அவுட் செய்தது என விஜய் கேட்டுள்ளார். அணைத்து லைட் மேன்களும் மறுத்துள்ளனர், அதற்கு மிக கடுமையாக விஜய் கொந்தளித்து என்ன நினைத்திருக்கிறீர்கள்.? தொலைத்து விடுவேன், உங்க வேலை என்ன. அதை மட்டும் தான் பார்க்கணும் என்று கடுமையாக விமர்சனம் செய்தவர் விஜய்.

அங்கிருந்த பவுன்சர்களை அழைத்து நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.? உங்களுக்கு என்ன வேலை.? லைட் மேன்கள் செல்போனில் பதிவு செய்து லீக் செய்து கொண்டிருக்கும் வரை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மிகக் கடுமையாக விஜய் கொந்தளிக்க அருகில் இருந்த இயக்குனர் வாரிசு படத்தின் இயக்குனர் திகைத்துப் போய் உள்ளார். அது மட்டும் இன்றி ஒட்டுமொத்த பட குழுவினரும் அச்சத்தில் சில நிமிடம் தலையை குனிந்தபடி நின்றுள்ளார்கள்.

இதன் பின்பு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, லைட் மேன்கள் லைட் செட் செய்த பின்பு அவர்களை வெளியில் அனுப்பி வைத்த பின்பு படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் அங்கே இருக்கும் பவுன்சர்களை மிக தீவிரமாக ஒவ்வொருவரையும் தொலைபேசி பயன்படுகிறார்களா என்று கண்காணித்து வந்துள்ளனர்.