இர்பான் ஓவர் வாய்க்கொழுப்பால் விஜய் சேதுபதியுடன் வாங்கி கட்டி கொண்ட பரிதாபம்…

0
Follow on Google News

இர்பான் என்றாலே கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரையில் உள்ள எல்லா ஹோட்டலில் இருக்கும் உணவுகளை தமிழில் ரிவ்யூ செய்யும் Food Reviewer என்பது போய், தற்போது இர்பான் என்றாலே சர்ச்சை என்ற பெயருக்கு மாறியுள்ளார். கடந்த ஆண்டு இர்பானின் கார் மோதி, எதிரே வந்த பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். இது அப்போது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதன் பிறகு, அது போன வருடம், இது இந்த வருடம் என்பது போல், கடந்த மாதம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பார்க்கும் நடைமுறைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டபோதும், அதனை துபாய் சென்று நான் பார்ப்பேன் என அங்கு சென்று பார்த்து, பின்னர் இந்தியாவில் வந்து ரிவில் செய்து, தனது youtube பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது பெரிய பூகம்பத்தை கிளப்பி, பலரிடமும் மன்னிப்பு கேட்டு ஓய்ந்த நிலையில், தற்போது, மீண்டும் குக் வித் கோமாளி ஷோவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த விஜய் சேதுபதியிடமும் வாய்க்கொழுப்பாக பேசி வாங்கி கட்டியுள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது மகாராஜா பட பிரமோஷனுக்காக வந்திருந்தார். அங்கு கோமாளிகள் எல்லோரும் விஜய் சேதுபதி படத்தின் பல்வேறு கெட்டப்களை போட்டு அசத்திய அவர்களுடன் விஜய் சேதுபதியும் சேர்ந்து Fun செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் சும்மா இருந்த விஜய் சேதுபதியிடம் இர்பான் வாய் கொடுத்து வாங்கி கட்டியுள்ளார்.

சோயா தன்னுடைய டேபிளில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது அந்தப் பக்கமாக வந்த விஜய் சேதுபதி, சோயாவிடம் ‘என்னமா நீ டைரக்டர் என்று பசங்க சொல்லுறாங்க’ என்று கேட்க, அங்கிருந்த தொகுப்பாளரான ரக்சன் வேண்டுமென்றே, ‘நீ என்னவெல்லாம் சாப்பிடுவாய்’ என்று கேட்கிறார்கள் என்றதும், சோயாவும், விஜய் சேதுபதி டைரக்டரானு கேட்கல போல, டயட்டான்னு கேட்டிருக்காங்க என நினைத்துக் கொண்டு, ஆமா சார் நான் டயட்டில் தான் இருக்கிறேன், நேற்று சாப்பிட்டது ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு, அதனால நான் இன்னைக்கு காலையில் இருந்து டயட்டில் இருக்கிறேன் என்று சொன்னார்.

அதைக் கேட்ட விஜய் சேதுபதி, என்ன நாம ஒன்னு கேட்க இவங்க இன்னொன்னு பேசுறாங்க என்பது போல் முழித்துக் கொண்டிருக்க, அவர் மீண்டும், நான் டயட்டான கேட்கல டைரக்டரானு கேட்டேன் என்று சொன்னார். அப்போது, அந்த நேரத்தில் தான் இர்பான் தேவையில்லாமல் தன் மூக்கை நுழைத்து விஜய் சேதுபதியிடம் வாங்கிக்கட்டினார். சோயா, விஜய் சேதுபதியிடம் 8 ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ணி இருக்கேன் என்று கூறினார்.

பிறகு பக்கத்தில் இருந்த இர்ஃபான், பார்க்க பேக்கு மாதிரி இருந்துட்டு இவ்வளவு வேலை பார்த்து இருக்கேன்னு சொன்னா நம்பவே முடியல சார் என விஜய்சேதுபதியிடம் கூறினார். இர்பான் சோயாவை மட்டம் தட்டி பேசுகிறார் என கடுப்பான விஜய்சேதுபதி, புத்திசாலிக்குனு ஏதாவது தனியா மூஞ்சி இருக்கா? அந்த மூஞ்சை காட்டு பார்ப்போம், சோயாவை ஏன் பேக்குனு சொல்ற, என வெளுத்து வாங்கினார்.

இர்பானின் இந்த பேச்சை கேட்டு டென்ஷனான விஜய் சேதுபதி கோவத்தில் அங்கிருந்து நகர்ந்தார். உடனே இர்பான் அப்படி சொல்லல சார், நான் அப்படி சொல்லல, சாரி, அந்த பொண்ணு நடந்துக்குற விதத்தை தான் சொன்னேன் என மழுப்பினாலும் அதைக் கேட்காமல் விஜய் சேதுபதி நகர்ந்து சென்றார். பிறகு இர்பானும் செய்வதறியாமல் முழித்துக்கொண்டிருந்தார்.

இனிமேல் எந்த பெண்களை பார்த்தும், யாருடைய திறமையை பார்த்தும் இப்படி விமர்சிக்க கூடாது என இர்பானுக்கு விஜய்சேதுபதி உணர்த்தியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் என்னதான் இருந்தாலும், இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை இப்படித்தான் பேக்கு என சொல்லி விமர்சிப்பதா என்றும், விஜய் சேதுபதி இர்ஃபானுக்கு தகுந்த பதிலடி தான் கொடுத்துள்ளார் என்றும் பாராட்டி வருகின்றனர்.