நடிகை சமந்தாவுக்கு சிபாரிசு செய்த விஜய்… கிடு கிடுவென உயர்ந்த சமந்தா மார்க்கெட்..!

0
Follow on Google News

சென்னை : தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கடுமையாக ஏமாற்றிய திரைப்படம் பீஸ்ட். இதன் கதையமைப்பும் திரைக்கதையும் மக்களை வெகுவாக ஏமாற்றியிருந்தது. அதேபோல நான் ஒரு ரா ஏஜென்ட் என அனைவரிடமும் வலிந்து வலிந்து கூறியிருப்பது படத்தின் மைனஸாக பார்க்கப்பட்டதுடன் ரபேல் விமானத்தை ராணுவத்திற்கே தெரியாமல் எடுத்துப்போவது போல வைக்கப்பட்ட காட்சி மக்களை கடுப்பேற்றியிருந்தது.

அதைவிட கொடுமை மிக உயரத்தில் பறக்கும் விமானத்தில் எந்தவொரு சேப்டி மெஷர்மெண்ட்ஸும் இல்லாமல் பறப்பது ரசிகர்களை தியேட்டரிலேயே தூங்கவைத்துவிட்டது. இந்த படுதோல்வியால் நொந்துபோன விஜய் அடுத்தடுத்த திரைப்படங்களை ஹிட் அடிக்கவைக்கவேண்டும் என மெனெக்கெட்டு வருகிறார். அதன் முதல்படியாக தெலுங்கு இயக்குனரின் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அந்த படத்தில் கனவுக்கன்னி ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதல் செட்யூல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது செட்யூலுக்காக வம்சி,ராஷ்மிகா, விஜய் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தடைந்தனர். நேற்றே இரண்டாவது செட்யூலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்த படத்தை பற்றி தகவல்கள் வெளியில் கசியாவண்ணம் படக்குழுவினர் கண்காணித்துவருகின்றனர். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருபவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் பக்கா கமர்சியல் படம் என்ற தகவல் மட்டுமே கசிந்துள்ளது. வழக்கம்போல இந்த திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலினே வாங்குவார் என கூறப்படுகிறது.

இதனிடையே விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவைக்க பலரை பரிசீலித்தநிலையில் விஜய் தனக்கு ஜோடியாக சமந்தாவை சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.. ஏற்கனவே தெறி மெர்சல் உள்ளிட்ட படங்களில் இந்த ஜோடி இணைந்திருப்பதால் விஜய் 67லிலும் இந்த வெற்றிஜோடி தொடரும் என கூறப்படுகிறது. மேலும் சமந்தா நடிப்பில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் வெளியான பின்பு சமந்தா மார்க்கெட் கிடு கிடுவென உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?