ப்ளீஸ் சார்… ரஜினியிடம் கெஞ்சிய விஜய்…நான் செஞ்சது தப்பு தான்.. ப்ளீஸ் சார்! என்ன நடந்து தெரியுமா.?

0
Follow on Google News

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட், இந்த படம் படு தோல்வி அடைந்து விஜய் ரசிகர்களே கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. வளர்ந்து வரும் இயக்குனரான நெல்சன் பீஸ்ட் படத்தின் படு தோல்வியால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. விஜய் படத்தை முடித்த கையோடு அடுத்து ரஜினியின் புதிய படத்தை இயக்கும் ஆர்வத்தில் இருந்த நெல்சனை அந்த படத்தில் இருந்து தூக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது பீஸ்ட் படுதோல்வி.

பீஸ்ட் பட தோல்விக்கு நடிகர் விஜய் கதை விவகாரத்தில் தலையிட்டு குளறுபடி செய்தது தான் என தகவலும் வெளியானது. இந்நிலையில் பீஸ்ட் தோல்விக்கு பின்பு இயக்குனர் நெல்சனை தொடர்பு கொண்டு பேசிய விஜய் ஆறுதல் தரும் விதத்தில், தைரியமாக இருங்க, சினிமாவில் இதெல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும். ஒரு வேலை என்னுடைய தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் இந்த படம் வெற்றி பெற்று இருக்கும். என்னுடைய தவறு தான் என பேசிய விஜய்.

மேலும், அடுத்து நம்ம ஒன்னொரு படம் பன்னுவோம் என இயக்குனர் நெல்சனை ஆறுதல் படுத்தியுள்ளார் விஜய். இதற்கு சார், ரஜினி சார் புதிய படத்தில் இருந்து என்னை மாற்றும் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள், அனிருத் மூலம் ரஜினி சாரிடம் பேசியாச்சு.. ஆனால் அனிரூத் பேச்சு அங்கே எடுபடவில்லை, இந்த புதிய படத்தில் என்னை மாற்றிவிட்டால் அடுத்து யார் சார் என்னை வெச்சு படம் எடுப்பது. என்னுடைய சினிமா கேரியரை முடிந்து விடும் போல என்று வருத்தப்பட்டு பேசிய நெல்சன்.

நீங்க ஒரு தடவ ரஜினி சாரிடம் பேசி பாருங்க சார் என விஜய்யிடன் தெரிவித்துள்ளார் நெல்சன் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு பேசிய விஜய், சார் பீஸ்ட் பட தோல்வியை வைத்து நீங்கள் நெல்சனின் திறமையை முடிவு செய்துவிட வேண்டாம், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற சரியான இயக்குனர் நெல்சன், நான் கதையில் சில மாற்றங்கள் கொண்டு வரவில்லை என்றால், அந்த பையன் படத்தை நல்ல எடுத்திருப்பான்.

ப்ளீஸ் சார்.. வளர்ந்து வரும் இயக்குனர், நீங்க எடுக்கும் முடிவில் தான் அந்த பையனின் சினிமா எதிர்காலமே இருக்கிறது என விஜய் பேசிய போது. நம்ம கையில் என்ன இருக்கிறது விஜய், தயாரிப்பாளர்களுக்கு ஆட்சேபனம் இல்லை என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் எனக்கும் அந்த பையன் மீது நம்பிக்கை இருக்கிறது, இருந்தும் இப்ப இருக்கிற சூழலில் நெல்சன் உடன் படம் பண்ணுவது சரியாக இருக்குமா என்பது தான் குழப்பமாக இருக்கிறது.

இருந்தாலும் நீங்கல்லாம் சொல்லும் போது, நெல்சனை வைத்தே படம் பண்ணலாம் என்கிற தைரியம் வருது என பாசிட்டிவான பதிலை விஜய்க்கு தெரிவித்துள்ளார் ரஜினி என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் சிபாரிசு காரணமா ரஜினிகாந்த் புதிய படத்தில் இருந்து இயக்குனர் நெல்சன் மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது, இதனால் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

நன்றி மறந்த ரஜினிகாந்த்… நடுதெருவில் நிற்கும் கே.எஸ்.ரவிக்குமார்..! அஜித்தை பார்த்து கற்று கொள்வாரா ரஜினி.?