சம்பள பாக்கி விஜய் வீட்டிற்கு படையெடுத்த பெப்சி தொழிலாளர்கள்.. கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு..

0
Follow on Google News

விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. பொங்கல் பண்டிகையின் போது அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்துடன் நேரடியாக மோதியது வாரிசு. இதில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூல் சாதனை படைத்ததாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வந்தவர், அதாவது தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் ஒன் நடிகர், அவர்தான் சூப்பர் ஸ்டார் என தெரிவித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கலோபரத்தை ஏற்படுத்தியவர் தில்ராஜ், அந்த வகையில் சர்ச்சைக்கு மிகவும் பெயர் பெற்றவர் தில்ராஜ் என்று தயாரித்த ஒரே படத்தில் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.

இதன் நிலையில் வாரிசு படத்தில் பணியாற்றிய பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்துக் கொண்டே வந்துள்ளார் தில்ராஜ். பட வெளிய ஆவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பளத்தை செட்டில் செய்யாமல் இழுத்துக் கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் கடும் கோபத்தில் தொழிலாளர்கள் பொறுமை இழந்து.

நேரடியாக விஜய் வீட்டிற்கு சென்று அங்கே விஜயிடம் முறையிடுவோம் என்று முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனால் இந்த தகவல் அறிந்த தில் ராஜ் அவசர அவசரமாக பெப்சித் தொழிலாளர்களை அழைத்து தான் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி சுமார் ஐந்து கோடியை கொடுத்து செட்டில் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தகவல் வாரிசு படம் வெளியான பின்பு தான் விஜய் கவனத்திற்கு சென்றுள்ளது இதைக் கேட்ட உடனே டென்ஷன் ஆன விஜய் நல்லவேளை தன் வீட்டிற்கு தொழிலாளர்கள் சம்பள பாக்கி கேட்டு படையெடுத்து இருந்தால் தமிழ் சினிமாவில் தன்னுடைய இமேஜ் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என தில் ராஜ் மீது கடும் கடுமையான கோபத்தில் விஜய் இருந்ததாக கூறப்படுகிறது