வெளியே தெரிஞ்ச என் மனமே போயிடும்… மனைவி சங்கீதாவிடம் கெஞ்சிய விஜய்…

0
Follow on Google News

சமீப காலமாக விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நடிகர் விஜயின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெற்றோர் மட்டும் அல்ல அவரின் மனைவி சங்கீதாவும் தான். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்னர்… குழந்தைகள் மற்றும் குடும்பத்தை இவர் கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டதால், விஜய் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தினார்.

இதுவே திருமணத்திற்கு பின்னர் விஜய் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு வர மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது. அதே போல் தன்னுடைய கணவரின் படவிழா, மற்றும் சில முக்கிய பிரபலங்களின் திருமண விசேஷங்களுக்கும் ஜோடியாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் சங்கீதா, கடந்த சில வருடங்களாகவே எந்த ஒரு நிகழ்ச்சியிலும், விஜய்யின் பட விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை சங்கீதா.

தன்னுடைய மகள் திவ்யா ஷாஷாவின் படிப்பின் காரணமாக சங்கீதா லண்டனில் இருப்பதால், சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சங்கீதா கலந்து கொள்ளவில்லை என தகவல் வந்தது, அதே வேலையில் விஜய் தன்னுடைய பட பிடிப்பு முடிந்ததும் வெளிநாடு செல்வது வழக்கமாக கடைபிடித்து வருகின்றவர்.ஆனால் விஜய் கடந்த 2 வருடமாகவே குடும்பத்தை சந்திக்க என வெளிநாடு சென்றதாக தெரியவில்லை.

அதே போல் விஜய் தன்னுடைய மகன் சஞ்சையுடனும் பேசுவது இல்லை என கூறப்பட்டது. ஏற்கனவே நடிகை ஒருவருடன் விஜய் நெருக்கம் காட்டியதால் தான் குடும்பத்தில் பிரச்சினை என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய காரணம் ஒன்று வெளியானது. இதனால், விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விஜய்யை விட்டு பிரிந்து விவகாரத்து பெறாமல் லண்டனில் தனியாக வாழ்ந்து வருகிறார் சங்கீதா என கூறப்படுகிறது.

அதாவது விவாகரத்து, கோர்ட் என சென்றால் விஜய் இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜாகி விடும் என விஜய் மனைவி சங்கீதாவிடம் கேட்டு கொண்டதாகவும், அதனால் தான் சங்கீதா விவாகரத்து பெறாமல் கணவர் விஜய்யை விட்டு பிரிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதே போன்று பாலிவுட்டிலும் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் ஜோடி பிரிய உள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறை சர்ச்சை வெடிக்கும் போது அவர்கள் இருவரும் ஒன்றாக ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். அதேபோன்று பொன்னியின் செல்வன் வெளியான போது சென்னையில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்தனர்.

தொடர்ந்து சமீபத்தில் அம்பானி சர்வதேச பள்ளி விழாவிடம் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஆனால் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் அபிஷேக் பச்சன் மற்றும் தனியாக சென்று வந்தார். அங்கு அமிதாபச்சன் மற்றும் அபிஷேக் மட்டுமே இருக்கக்கூடிய வீடியோக்கள் வைரல் ஆகின. அந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளாததினால் இருவருக்கும் விவாகரத்து என்ற சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.

மேலும் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் தனித்தனியாக தான் வசித்து வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகின. ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடினாலேயே இந்த தம்பதிகள் பிரிந்து விட முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் விஜய் – சங்கீதா போன்று விவாகரத்து பெறாமல் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் ஜோடி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.