அட்லீ படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஜய்…. விஜய்யின் இந்த முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

எங்க அண்னனுக்கு நான் தாண்டா செய்வேன், அப்படி தாண்டா செய்வேன், என மேடைக்கு மேடை விஜய்யை என் அண்ணன், என் அண்ணன் என்று பேசி வரும் விஜய்யின் அம்பு தம்பிகளில் ஒருவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார், முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இரண்டாவது படம் தெறி படத்தில் நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைத்தார்.

இரண்டாவது படம் தெறி மிக பெரிய ஹிட் கொடுத்தது, இந்த படத்தில் விஜய் உடன் நெருங்கி பழகிய அட்லீ, நடிகர் விஜய்யின் அன்புக்குரியவரானார். தெறி படம் இதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்திரியன் படத்தின் காப்பி என்கிற விமர்சனம் இருந்தாலும், அட்லீயின் திரைக்கதை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது.

தெறியை தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த அட்லீ மொத்தம் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய் நடித்தது. தற்பொழுது ஷாருகான் நடிப்பில் இந்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார் அட்லீ, இதில் நடிகை நயன்தாரா மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படம் முடிந்ததும் அடுத்து விஜய் நடிப்பில் ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் இது விஜய் – அட்லீ கூட்டணியில் தயாராகும் நான்காவது படம்.

ஷாருக்கான் நடிப்பில் விறுவிறுப்பாக முன்பையில் படப்பிடிப்பு நடந்து வரும் ஜவான் படத்தில் தற்பொழுது நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் பேன் இந்தியா படமாக எதிர்பார்க்க படுகிறது. மேலும் இந்த படத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு வரவேற்பு பெரிதாக இல்லை. தமிழ் திரையுலகை சேர்ந்த அட்லீ, நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடித்தாலும் ஜவான் படம் குறித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு வரவேற்பும் இல்லை.

இதனை தொடர்ந்து தமிழிலும் ஜவான் படத்தை வெற்றியடைய செய்ய ஷாருகான் மற்றும் அட்லீ இருவரும் இணைந்து இந்த படத்தில் விஜய்யை நடிக்க ஏற்பாடு செய்துள்ளனர், அதற்காக விஜய்யிடம் பேசி கால்ஷீட்டும் வாங்கியுள்ளனர்.விஜய் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட இருப்பதால், மும்பையில் இருந்து ஜவான் படக்குழு சென்னை வர உள்ளது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜவான் படத்தில் ஷாருகான் உடன் இணைந்து நடிக்க இருக்கும் விஜய் இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளம் ஏதும் வாங்கவில்லை என்றும், இந்த படத்திற்காக ஒரு நாள் கால்சீட் விஜய் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தனது அன்பு தம்பி அட்லீக்காக தான் ஷாருகான் படத்தில் சம்பளம் வாங்காமல் விஜய் நடிப்பதாக சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா – தனுஷ் விவகாரம்… அனிரூத் செய்தது சரி தான்.. ரஜினிகாந்த் பாராட்டு..! என்ன நடந்தது