லியோ படத்திற்கு உதயநிதி வைத்த ஆப்பு… விஜய் சரண்டராவதை தவிற வேறு வழியில்லை…

0
Follow on Google News

பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெறுவதற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சற்று இறங்கி வந்தாலும் கூட நடிகர் விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் முன்பு இருந்த கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்து எந்த ஒரு காரணத்திற்காகவும் என்னுடைய படம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிக்கு கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து வந்தார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் அஜித் நடித்த துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியிருந்த நிலையில், விஜயின் வாரிசு வெளியாகும் அதே தேதியில் துணிவு படத்தை வெளியிட முடிவு செய்தார் உதயநிதி. இதனால் திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடங்கி பல்வேறு பிரச்சனைகளை வாரிசு படம் சந்தித்து வந்தது, உதயநிதி – விஜய் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட அஜித்.

இதுவரை வசூலில் நம்பர் ஒன் விஜய் தான் என்கிற ஒரு பிம்பத்தை உடைக்க அஜித்தும் விஜய் படத்துடன் மோதுவதற்கு தயாரானார். இறுதியில் வாரிசு – துணிவு நேரடி மோதலில், வசூலில் விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டார் அஜித், மேலும் வாரிசு படம் சோலோவாக வெளியாகி இருந்தால், இன்னும் அதிகம் வசூலை பெற்றிருக்கும் அந்த வகையில் வாரிசு படத்தினால் விஜய்க்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு முக்கிய காரணமாக இருந்தது உதயநிதி தான் என்கிற விமர்சனமும் எழுந்தது.

இந்த நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை பெறுவதற்கு உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தீவிரம் காட்டி வருகிறது, ஆனால் விஜய் கடந்த கால நிகழ்வுகளை மனதில் வைத்து கொண்டு, எந்த ஒரு சூழலிலும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு கொடுக்க கூடாது என உறுதியாக இருக்கிறாராம்.

இதனால், இதற்கு முன்பு வாரிசு படத்தின் போது, விஜய்க்கு தண்ணி காட்டியது போன்ற ஒரு ஆட்டத்தை தொடங்கியுள்ளதாம் ரெட் ஜெயண்ட் மூவிஸ், இதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இந்த படத்திற்கான சிஜி ஒர்க் இன்னும் முடியவில்லை. அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறது.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 பாகத்தை விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகும் அதே தேதியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை ரெட் ஜெயண்ட் மூவிஸ் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, ஏற்கனவே பொன்னியின் செல்வன் படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்று மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் உள்ளது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 உடன் விஜயின் லியோ மோதினால் மிக பெரிய சேதாரத்தை லியோ சந்திக்க நேரிடும் என்பதால், இம்முறை லியோ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு கொடுத்து விட்டு பொன்னியின் செல்வன் 2 படத்தின் நேரடி போட்டியில் இருந்து தப்பித்து கொண்டால் விஜய் மிக பெரிய பதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளாமல் என்கிறது சினிமா வட்டாரங்கள்.