கமல் நடித்த அந்த படத்தின் கதை தான் விஜய்யின் கோட்… அட்லீ பார்முலாவை கையில் எடுத்த வெங்கட்பிரபு…

0
Follow on Google News

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், கோட் படமானது வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் உள்ளது. ஆனால் எப்பொழுதுமே விஜய் பட பாடல்களுக்கு கிடைக்கும் ரீச் ஆனது, இந்த கோட் படத்தின் எந்த பாடல்களுக்கும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் படமாவது நன்றாக இருக்குமா, இருக்காதா, இந்த பாடல்கள் போலவே படமும் ஊத்திக் கொள்ளுமா என ரசிகர்கள் கவலையில் இருந்த சூழ்நிலையில், தற்போது இந்த படத்தின் மொத்த கதையும் வெளியாகி, ரசிகர்களும் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். மேலும் இது கமல் நடித்த ஒரு படத்தின் ரீமேக் படம் தான் என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.

முதலில், கோட் திரைப்படம் ஒரு டைம் டிராவல் படம் எனக் கூறப்பட்டது. பின்னர் சைன்ஸ் பிக்சன் ஜானரில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி அப்படி எதுவுமே படத்தில் இல்லை, இது சாதாரண கமர்ஷியல் படமாகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது என தெரியவந்துள்ளது. அப்பா மற்றும் மகன் என இரு விஜய் இந்த படத்தில் இருக்கின்றனர்.

இதில் அப்பா விஜய்க்கு சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சியும் ஜோடியாக நடித்திருக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த படமானது 1985 ஆம் ஆண்டு வெளியாகி, கிட்டத்தட்ட சுமார் 175 நாட்கள் வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய, பாரதிராஜா, பாக்கியராஜ், கமல் ஆகியோர் கூட்டணியில் ரிலீஸான ஒரு கைதியின் டைரி என்ற படத்தின், புதிய வெர்சன் திரைப்படம் தான் கோட் படம் என தெரியவந்துள்ளது.

ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் அப்பா கமல், வில்லன்களை போட்டுத் தள்ளிக்கொண்டிருப்பார். காவல்துறையில் அதிகாரியாக இருக்கும் மற்றொரு கமல் தந்தையை சுற்றிவளைத்து பிடிக்க நினைப்பார். அதுப்போலவே, கோட்டிலும் காவல்துறையில் அப்பா விஜய் சீக்ரெட் ஏஜென்டாக நடித்துள்ளாராம். அப்பா விஜய் தன்னுடைய முக்கிய டீம்களுடன் இணைந்து தமிழகத்தில் இருக்கும் தீவிரவாதக் கும்பலை தேடிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், அந்தத் கும்பலில் வளர்க்கப்பட்டு தற்போது அப்பாவுக்கு வில்லனாக இருக்கிறார் மகன் விஜய். அப்பா விஜயோ தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக நினைக்கிறார். ஆனால் அவரோ வெடிகுண்டு வைக்கும் கும்பலின் முக்கியத் தலைவராக இருப்பது கிளைமேக்ஸில் தான் தெரிய வரும். அப்போது கடைசியில் இன்னொரு வில்லன் டீமை பிடிக்க இருவரும் இணைகின்றனர். அப்பாவும், மகனும் கடைசியில் உண்மையை தெரிந்துகொள்கின்றனர்.

இதனால் பல நாட்களாக விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சயின்ஸ் பிக்‌ஷன் கதை இது இல்லை, இது கமல் நடித்த ஒரு கைதியின் டைரி என்ற படத்தின் கதை என தெரியவந்துள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் வெங்கட் பிரபுவை கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், தி கோட் படத்தின் கதை குறித்த அப்டேட் ஒன்றை வெங்கட் பிரபுவும் தெரிவித்துள்ளார். அவர், முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், ஒரு கற்பனை கதை தான். இருப்பினும், அது உண்மையான கதைக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மிகவும் துணிச்சலாக செயல்பட்ட ஒரு ஸ்பெஷல் ஆன்டி டெரரிஸ்ட் ஸ்குவாட் டீம் ஒன்று RAW அமைப்புடன் இணைந்து பணியாற்றியது. அப்போது கடந்த காலத்தில் துணிச்சலாக செய்த செயல் ஒன்று தற்போது பிரச்சனையாக நிகழ்காலத்தில் வந்து நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி காண்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை என்று கூறியுள்ளார். மேலும் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருந்தாலும், இதில் மேலும் பல சஸ்பென்ஸ்களும் ஸ்வாரஸ்யங்களும் நிறைந்துள்ளன. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தான், இப்படி மாற்றி மாற்றி கோட் படத்தின் கதை இதுதான் என, ஒவ்வொரு கதையாக வெளிவருவதை பார்த்து, விஜயின் படத்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் குமுறி வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யும் தொடர்ந்து பிளாப் படங்களையே கொடுத்து வருவதால் இந்த படமாவது ஹிட் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது இதுவும் அட்டர் பிளாப் ஆகப்போகிறது என ரசிகர்கள் புலம்பி வருவதும் கவனிக்கத்தக்கது.