தந்தை வைத்த செக்… தப்பிக்க வழியின்றி தாயிடம் விஜய் சரண்டர்… எல்லாம் விஜய்யின் சுயநலமே.!

0
Follow on Google News

கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் புதியதாக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தந்தை தொடங்க இருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. மேலும் எனது பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்பு படுத்தி ஏதேனும் விவாகரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார் விஜய்.

மேலும் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் தாய் சோபா உட்பட்ட சில அவருடைய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் விஜய். அப்போது இருந்து தற்பொழுது வரை விஜய் அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா இருவருடனும் பேசி கொள்வதில்லை என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தொடர்ந்து மகன் விஜய் அவமானப்படும் வகையில் ஒரு சில விஷயங்களை செய்து வருகிறார் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர். விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியான போது அந்தப் படத்தை வெளிப்படையாகவே கடுமையாக விமர்சனம் செய்தார். படத்தின் கதாநாயகன் கதை தேர்வு செய்வதில் கோட்டை விட்டுவிட்டார் என்பது போன்று பேசியவர், படத்தின் இயக்குனரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இது விஜய் தந்தையே அவருடைய மகன் படம் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டார் என்கிற காரணம் பீஸ்ட் படம் தோல்வியை உறுதி படுத்தும் விதத்தில் அமைந்தது. அதே போன்று விஜய் தாய்-தந்தை திருமண விழாவை மகன் இல்லாமல் தனியாக சந்திரசேகர் – ஷோபனா இருவரும் கொண்டாடினார்கள். இது பார்ப்பவர்களுக்கு மகன் இருந்தும் ஆதரவற்றவர் போன்று தாய் தந்தையினர் அவர்களின் திருமண விழாவை கொண்டாடுவது பரிதாபமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதே போன்று விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் தாய் – தந்தை முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள், அப்போது விஜய் தாய் விஜய்யை பார்த்து வணக்கம் வைக்கிறார், ஆனால் விஜய் தன்னுடைய தாயையும் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக வணக்கம் வைத்து விட்டு கடந்து செல்கிறார்.

ஆனால் விஜய் தன் அருகில் வரும் பொழுது, தன்னுடைய மகன் தன்னிடம் ஒரு வார்த்தை பேசுவாரா என்கிற ஏக்கம் தாய் சோபா கண்ணில் தெரிகிறது, ஆனால் மகன் தன்னை கூட்டத்தில் ஒருவர் போன்று வணக்கம் வைத்து கடந்து செல்லும் போது அந்த தாய் முகம் வாடியதை பார்ப்பவர்கள் கண் கலங்க வைத்து விடுகிறது இந்த சம்பவம். இது போன்ற செயல் சந்திரசேகர் – சோபா தன்பாதியினருக்கு அனுதாபத்தையும் விஜய் மீது கோபத்தையும் ஏற்படுத்துவது போன்று அமைந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய் விரைவில் அதிரடியாக அரசியலில் இறங்க இருப்பதாகவும் அதற்கான நகர்வுகளை மிக சாதுரியமாக தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அரசியல் மாநாடு போன்று திருச்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நடிகர் விஜய், அங்கே தமிழக முழுவதும் உள்ள தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இருக்கிறார்.

இந்த நிலையில் விரைவில் அதிரடியாக அரசியலில் நடிகர் விஜய் களமிறங்க இருப்பதால், அவர் தாய் – தந்தையிடம் சண்டையிட்டு தனியாக இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி அது அவருடைய அரசியலுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும். மேலும் ஏற்கனவே நடிகர் விஜயின் தந்தை பீஸ்ட் படம் வெளியான போதும் மற்றும் பல பேட்டிகளிலும் விஜயை மறைமுகமாகவே விமர்சனம் செய்திருந்தார்.

அந்த வகையில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுகளை அதிரடியாக தொடங்கும் காலகட்டத்தில் அவருடைய தந்தை விஜய் மீது விமர்சனம் வைத்தால், அது விஜய் அரசியலுக்கு பலத்த அடியாக அமைந்துவிடும். அந்த வகையில் நடிகர் விஜய் தற்பொழுது தாய், தந்தையிடம் சமரசம் செய்யவேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதன் அடிப்படையிலேயே சமீபத்தில் தாய் சோபாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய், அந்த புகைப்படத்தை தன்னுடைய மக்கள் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் மூலம் வெளியிட்டு விளம்பரப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாய் சோபாவை சந்தித்ததின் பின்னணியில் விஜயின் அரசியல் காரணம் உள்ளது என்றும், அதே நேரத்தில் தந்தையை இதுவரை சந்தித்து பேசாத நடிகர் விஜய், தாய் மூலம் தந்தையே தனக்கு எதிராக ஏதும் பேச வேண்டாம் என்கின்ற கோரிக்கையை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசியல் காரணத்திற்காகவும், மற்றும் தாய் – தந்தை விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்கவும் தான் தாய் சோபாவை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு விளம்பரப்படுத்தி, தனக்கும் என்னுடைய பெற்றோருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை காண்பிக்கவே தாயை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார் விஜய் என கூறப்படுகிறது.