தாய் ஆசையை நிறைவேற்றாத விஜய்… மிக பெரிய ஏமாற்றத்தில் விஜய் தாய் ஷோபா..

0
Follow on Google News

நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து வரிசையாக பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் அவருடைய அப்பாவிடம் பேசுவதில்லை என்றும், மனைவி சங்கீதா மற்றும் அவரது பிள்ளைகள் அனைவரும் லண்டனில் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பதால் அவரைச் சுற்றி எப்போதும் விமர்சனங்களும் கமெண்ட்களும் வந்த வண்ணம் உள்ளன.இப்படியான சூழலில் விஜயின் அம்மா சோபா அவர்களே அவரைப் பற்றி பேட்டியில் வெளிப்படையாக பேசி வேதனை தெரிவித்துள்ளார் . இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பா சந்திரசேகரைத்தான் கஷ்டப்படுத்துகிறார் என்று பார்த்தால், இப்போது அம்மா ஷோபாவையும் வார்த்தைகளால் வேதனைப்படுத்தி இருக்கிறார் என்று கமெண்ட்களை வாரி இறைத்து வருகின்றனர். எப்போதும் படத்தின் சூட்டிங், அவ்வப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பணிகள் எனக்கு பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதன்மையான இடத்தில் உள்ளார்.

இப்படி விஜய் ஓடி ஓடி சம்பாதிக்கும் பணம் அவரது குடும்பத்திற்காக தான். இருப்பினும், இப்போது நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தனியாகத்தான் வசித்து வருகிறார். மனைவி சங்கீதாவும் குழந்தைகளின் படிப்பிற்காக லண்டனில் வசித்து வருகிறார். அதேபோல், விஜயின் பெற்றோரும் சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

விஜய்க்கும் அவரது அப்பாவிற்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், விஜய் அவரது அம்மா ஷோபா மீது அன்பாகத்தான் இருந்து வருகிறார் என்பது போல பல்வேறு மீடியாக்களில் சொல்லப்படுகிறது. இது குறித்து விஜயின் அம்மா ஷோபா பல பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் என்பதால், அவரைப் பேட்டி எடுக்க முடியாத பல youtube சேனல்கள் அவரது பெற்றோரையும், நெருங்கிய நண்பர்களையும் பேட்டி எடுத்து வருகின்றன. இப்படி விஜயின் அம்மாவை பேட்டி எடுக்கும்போது, விஜய் பற்றி சொல்லுமாறு கேட்டிருக்கிறார்கள். அப்போது விஜயை பற்றி பேசிய அவரது அம்மா, விஜய் எப்போதும் எங்கள் மீது அன்புடன் இருப்பார், சமீபத்தில் எங்களது ஐம்பதாவது திருமண நாள் வந்து போது, எனக்கு போன் பண்ணி பத்து நிமிஷத்தில் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தார். சொன்னபடியே பத்து நிமிஷத்தில் வீட்டிற்கு வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அப்போது நானும் விஜயும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். என்று விஜய்யை பற்றி கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசுகையில், என் மகன் எப்போதும் என் மீது பாசமாக இருப்பதால் படத்திலும் அவருக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. இது குறித்து நான் விஜய் இடம் தெரிவித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் கூட அம்மா கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று விஜய் இடம் கேட்டேன். ஆனால் விஜய் “உங்களைப் பார்த்த உடனே நான் சிரித்து விடுவேன் அப்புறம் எப்படி நான் நடிக்க முடியும் ” என்று கூறி வாய்ப்பு தரவில்லை என்று சோபா அவர்கள் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜயின் அம்மா அளித்த இந்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறி உள்ளது.