வாயை கொடுத்து வம்பில் சிக்கிய விஜய்…. வெளுத்து வாங்கிய ரஜினி உறவினர்…

0
Follow on Google News

ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் ரஜினி பேசிய காக்கா-கழுகுக் கதை மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்தி, ரஜினியின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வந்த நிலையில், விஜய் இதற்கான பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்த படியே, சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று முடிந்த லியோ படத்தின் வெற்றிவிழாவில் விஜய் பதிலடி கொடுக்கும் வகையில், குட்டி ஸ்டோரி சொல்லியிருந்தார்.

அதில், “காடு என்று இருந்தால், முயல், யானை, கழுகு, காக்கா என எல்லா உயிரினங்களும் இருக்கத் தானே செய்யும்” என்று நகைச் சுவையாகப் பேசியிருந்தார். மேலும் லியோ வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் இயக்குனர் ரத்ன குமார், “எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும்” என பேசியது ரஜினியை தாக்குவது போல் கூறியிருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர். இவ்வாறு ரஜினிக்கும் விஜய்க்கும் ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரஜினியின் மனைவி லதா உறவினரான நடிகை மதுவந்தி எரிகின்ற நெருப்பில் என்னை ஊற்றுவது போல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாகவே சக்சஸ் மீட் என்றால், அந்த படத்தில் பணி புரிந்த கலைஞர்கள், நடிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மேடையில் பேசுவார்கள் என தெரிவித்த மதுவந்தி. அணல், லியோ பட சக்சஸ் மீட்டில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. விஜய்யை மட்டுமே புகழ்ந்து பேசி இருந்தார்கள். அதேபோல் எல்லாரும் காக்கா -கழுகு பற்றியும் பேசியிருந்தார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொல்லும் போதே நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் இது ஒரு யதார்த்தமான கதை என்றும் கூறியிருந்தார். அவர் இப்படி கூறியதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால்தான் இப்போது வரை பலரும் யாரு காக்கா? யாரு கழுகு? என்று சோஷியல் மீடியாவில் வீண் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தொடர்ந்து பேசிய மதுவந்தி விஜயையும் கடுமையாக விமர்சித்தார்.

லியோ சக்சஸ் மீட்டில் பேசிய விஜய் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்று கூறினார். விஜய்க்கே சூப்பர் ஸ்டார் யார் என்றும் தெரியும் போது, எதற்கு தேவையில்லாத விவாதம்?என கேள்வி எழுப்பியுள்ள மதுவந்தி, மேலும் சொல்லப்போனால் விஜய் எத்தனையோ மேடைகளில் ரஜினியின் காலில் விழுந்திருக்கிறார். அப்படி இருக்கையில், ரஜினியுடன் மோதி ஜெயிக்க முடியுமா? சூப்பர் ஸ்டாருக்கு என்றும் சூப்பர் ஸ்டார் தான் நிகர். அவருடைய இடத்தை யாராலுமே பிடிக்க முடியாது. என்று மதுவந்தி விஜயை விளாசியுள்ளார்.

மேலும் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும் என ரத்னகுமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மதுவந்தி. “கழுகு மேலே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதானே ஆக வேண்டும் என்று ஒருவர் பேசுகிறார். அந்தத் தம்பிக்கு தெரியவில்லை போல. அதாவது கழுகு கீழே வந்தால் தாக்கிவிட்டு தனக்கு தேவையானதை எடுத்துவிட்டு அனைத்தையும் கலைத்துப்போட்டுவிட்டு போயிடும்.கழுகு கீழே வந்தால் கீழே இருக்கும் பிராணிகளுக்குத்தான் ஆபத்து. கழுகுக்கு என்றைக்குமே ஆபத்து இல்லை.

அதனால் கழுகு எப்போதும் மேலேயே பறந்துகொண்டிருப்பதுதான் கீழே இருக்கும் பிராணிகளுக்கெல்லாம் நல்லது” என மதுவந்தியின் பேச்சு இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வாரிசு பட ஆடியோ வெளியிட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் விஜய் என சரத்குமார் பேசிய பேச்சு மிக பெரிய பிரட்சனையாக உருவெடுத்து, தற்பொழுது லியோ வெற்றி விழாவில் பிரச்ச்னைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் விஜய் பேசி இருந்தாலும், இயக்குனர் ரத்னகுமார் மீண்டும் விஜய்யை வம்பில் மாட்டிவிட்டுள்ளார்.