எதுக்கு விஜய் இப்படி பிச்சை எடுக்கணும்.. ரசிகர்களா அதை கொடுக்கணும்…பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்…

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் சில நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது பெரியார், அம்பேத்கார், காமராஜர் போன்ற தலைவர்களை குறிப்பிட்டு சில விஷயங்களை பேசி இருந்தார். அதே போன்று அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் மாலை அணிவித்து கௌரவப்படுத்த செய்திருந்தார்.

இந்த நிலையில் விஜய் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை திட்டமிட்டு புறக்கணிப்பதாக பிரபல தயாரிப்பாளர் AM சவுத்ரி தேவர் பகிரங்கமாக நடிகர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் நடிகர் விஜயை மிக கடுமையாக சமீப காலமாக விமர்சனம் செய்து வரும் AM சவுத்ரி தேவர், தற்பொழுது விஜயை மிக கடுமையாக விமர்சனம் செய்து சவுதிரி தேவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை நடிகர் விஜய் உச்சரிக்க சொல்வதற்கு விஜயின் தரப்பிலிருந்து சிலர் நான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சொல்லச் சொல்லி நடிகர் விஜய்யிடம் பிச்சை கேட்பதாக கமெண்ட் செய்கிறார்கள். ஒரு தலைவர் பெயரை பிச்சை கேட்டால் தான் விஜய் சொல்லுவார் என்றால் அப்படியானால் அவர் தளபதி என்கின்ற பெயரையே அவருடைய ரசிகர்களிடம் பிச்சை கேட்டு வாங்கும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார் என தெரிவித்த சௌத்ரி தேவர்.

விஜயை என் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார், அதில் சமீபத்தில் நடந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் விஜய் என்று குறிப்பிடக் கூடாது தளபதி என்றுதான் குறிப்பிட வேண்டும் என விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததை சுட்டி காட்டிய சவுத்ரி தேவர், அப்படியானால் புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களிடம் விஜய்யை தளபதி என்று அழைக்க வேண்டும் என பிச்சை எடுக்கிறாரா என்றும், அந்த வகையில் நடிகர் அஜித்தை இந்த விஷயத்தில் பாராட்டலாம்,

தன்னை யாரும் தல என்று அழைக்கக்கூடாது அஜித் குமார் என்கின்ற தன்னுடைய பெயரை சுருக்கி ஏ கே என்று அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மேலும் விஜய் தனக்கு சூட்டிக்கொண்ட தளபதி என்ற பெயரை புது பெயர் இல்லை, அது காப்பி அடித்த பேரு தான், ஏற்கனவே ஐம்பது வருடமாக அரசியலில் தடம் பதித்து இன்று முதல்வராக இருக்கக் கூடியவர் தளபதி, அவருடைய பட்டத்தை திருடுகிறீர்கள் உங்களுக்கு சுயமாக சிந்திக்க தெரியாதா.? என கேள்வி எழுப்பிய சௌந்தரி தேவர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிறந்த விஜய் ஜாதி என்ற வலையில் நிச்சயம் சிக்குவார், அப்படி இருக்கும் பொழுது விஜய்க்கு இந்த சில்லி அரசியல் தேவையில்லை, அனைத்து தலைவர்களுக்கும் நடுநிலையாக வைத்து இருந்தால் தான் விஜய் அரசியலில் வெற்றியடைய முடியும், புஸ்ஸி ஆனந்த் மாதிரி ஆட்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு ரசிகர்களை கட்டி போட முடியாது.தல தளபதி என்பதை ரசிகர்கள் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டாம் என தெரிவித்த சௌத்திரி தேவர.

இனிவரும் காலங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை விஜய் உச்சரிக்க வேண்டும் என தெரிவித்த சாவித்திரி தேவர் தொடர்ந்து நடிகர் விஜய் விஜயகாந்த் கிட்ட எப்படி நடந்து கொண்டார் என்பதை நான் தொடர்ந்து பேசி வருகிறேன் இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மக்களும் விஜய் மீது தவறு உள்ளது என்று உணர்கிறார்கள் பலரும் என்னை பாராட்டினார்கள் என AM சௌத்ரி தேவர் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.