திருந்தாத வடிவேலு… விஜய் சேதுபதி படத்தில் இருந்து வெளியேற்றம்… என்ன செய்தார் வடிவேலு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் வடிவேலு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக கதாநாயகர்களுக்கு சமமான அந்தஸ்துடன் இருந்து வந்தார், அவருடைய தலைக்கனம் மற்றும் ஆணவம் காரணமாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனார் வடிவேலு. மீண்டும் சினிமாவில் தற்போது ரீ என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள வடிவேலு நடித்த நாய் சேகர் படம் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் அடுத்தடுத்து பெரிதாக பட வாய்ப்புகளும் வடிவேலுவுக்கு கிடைக்கவில்லை, இதற்கு காரணம் வடிவேலு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக அறிவித்தாலும் கூட, மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இல்லை. இதனை தொடர்ந்து ஏற்கனவே தன்னுடைய தலைக்கணத்தின் காரணமாக சினிமாவில் காணாமல் போன வடிவேலு, சுமார் பத்து வருடங்களுக்கு மேல் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தார்.

ஆனால் அவர் அதிலிருந்து எந்த ஒரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தற்பொழுது அவரின் நடவடிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. விஜய் சேதுபதி நடிக்கும் ஆறுமுகம் சாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் வடிவேலுக்காக சில சிறப்பு காட்சிகள் அந்த படத்தின் இயக்குனர் தயார் செய்து வைத்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்த நிலையில், வடிவேலு இந்த படத்தில் நடிக்க கால் சீட் கேட்க்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் 5 கோடி வரை சம்பளம் கேட்க, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் எந்த ஒரு பதிலும் சொல்லாமல், வடிவேலுவை இந்த படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு வேறு ஒரு நடிகரை தெரிவு செய்யும் முடிவுக்கு வந்துள்ளன.