வடிவேலுக்கு வாழ்க்கை கொடுத்த ராஜ்கிரனுக்கு இந்த நிலையா.? வடிவேலு இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் வடிவேலு முன்னணி காமடி நடிகராக இருந்து படத்தின் ஹீரோவுக்கு போட்டியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர், முதலில் வடிவேலு கால் சீட் வாங்கிட்டு அடுத்து ஹீரோ கால் சீட் வாங்கிய சுழலும் இருந்தது, அந்த அளவுக்கு மிக பெரிய உச்சத்தில் இருந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் நிலை உயரும் போது பணிவு வேண்டும் தோழா என்கிற தத்துவ பாடலுக்கு ஏற்ப நடந்து கொள்ளாமல். உச்சத்திற்கு சென்றதும் வடிவேலுக்கு ஆணவமும் தலைக்கு ஏறியது.

அவர் நடிக்கும் படத்தில் இயக்குனரிடம் காட்சிகளை மாற்ற சொல்வது, டயலாக்கை மாற்ற சொல்வது என இயக்குனருக்கு கடும் தலைவலியாக இருந்து வந்தது மட்டுமில்லாமல் அவர் நடிக்கும் படத்தின் ஹீரோக்களுடனும் மோதல் போக்கை கடைபிடிக்க, இப்படி ஒவ்வொரு ஹீரோக்களும், இணயக்குநர்களும் இந்த ஒரு படத்தில் மட்டும் வடிவேலு உடன் பணியாற்றி விட்டு தப்பித்தால் போதும், இனிமேல் இவருடன் இணைந்து படமே பண்ண கூடாது என்கிற முடிவுக்கு வந்தனர்.

இதனை தொடர்ந்து இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிக பெரிய சரிவை சந்தித்து சினிமாவில் காணாமல் போன வடிவேலு. தற்போது மீண்டும் தற்பொழுது ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். வடிவேலுவின் ரீ என்ட்ரி எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது, அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் திரைக்கு வந்த பின்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை பொருத்து தான் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.

சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான படங்கள் படு தோல்வியை சந்தித்து வருகிறது, இதற்கு காரணம், மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. சில வருடம் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் இருந்த வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஆணவம் இன்னும் குறையவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் வடிவேலுக்கும் அந்த படத்தின் இயக்குனர் பி.வாசுவுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக வடிவேலு காட்சிகளை பி.வாசு பெருமளவு குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் தற்பொழுது வடிவேலு நடித்து வரும் மாமன்னன் திரைப்படம், தனக்கு வெற்றி பெற்று தரும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் வடிவேலு.

இந்நிலையில் வடிவேல் – ராஜ்கிரண் இடையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் இருந்து வடிவேலுவை அழைத்து வந்தவர் ராஜ்கிரண். அவரது அலுவலகத்தில் ஆபிஸ் பையனாக வேலை செய்து வந்த வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பை அமைத்து கொடுத்தவர் ராஜ்கிரண். இதன் பின்பு அடுத்தடுத்து சினிமாவில் நடித்து உச்சகட்ட காமெடி நடிகரானார் வடிவேலு. அதே சூழலில் பல படங்கள் தயாரித்து தோல்வியடைந்து நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்து வந்துள்ளார் ராஜ்கிரண்.

அப்போது ராஜ்கிரண் பணப்பிரச்சனையில் இருப்பதை தெரிந்து கொண்ட வடிவேலு, சில லட்சங்கள் கொடுத்து உதவி செய்துள்ளார். ஆனால் செய்த உதவியை வெளியில் தம்பட்டம் அடிப்பது போன்று. ராஜ்கிரண் மிக பெரிய கஷ்டத்தில் இருக்கிறார். நான் தான் பண உதவி செய்துள்ளேன் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்க. இந்த செய்தி பரவலானது. இது ராஜ்கிரணுக்கு மிக பெரிய தர்ம சங்கடத்தை சினிமா வட்டாரத்தில் பெற்று தந்தது.

அப்போது ராஜ்கிரண் தனக்கு நெருக்கமானவர்களிடம் நான் வடிவேலுவிடம் பணம் கேட்கவில்லை அவராக வந்து பணம் கொடுத்தார். நான் கூட வேண்டாம் என்று தான் சொன்னேன், பரவாயில்லை வெச்சுக்கங்க என்றார். ஆனால் அதை வெளியில் தெரிவித்து எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார் வடிவேலு என ராஜ்கிரண் வருத்தப்பட்டதாக கூறப்டுகிறது.