சந்திரமுகி 2 தோல்விக்கு பின்னணியில் வடிவேலு… இனி யார் தான் வடிவேலுவை வெச்சு படம் எடுப்பது.?

0
Follow on Google News

நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் கதாநாயகர்களுக்கு சமமான சம்பளம் வாங்கிக் கொண்டு, கதாநாயகர்களுக்கான அந்தஸ்துடன் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வந்தவர்.முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டு அடுத்து படத்தின் கதாநாயகனிடம் கால்சீட் வாங்கும் காலமும் இருந்தது, நடிகர் வடிவேலு ஒரு உயரத்துக்கு வந்த பின்பு அவருடைய திமிரான நடவடிக்கையால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அடுத்து வடிவேலு வைத்து படம் எடுப்பதற்கு தயக்கம் காட்டினார்கள்.

இதனால் சுமார் பத்து வருடம் சினிமா வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கினார் வடிவேலு மீண்டும் தற்பொழுது சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் சில படங்களில் கமிடாகி நடித்து வந்தார். நாய் சேகர் ரிட்டர்ன், மற்றும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வந்த வடிவேலு சந்திரமுகி 2 படத்தின் வடிவேலு காட்சிகள் படமாக்க வேண்டியிருந்த நிலையில், நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடிப்பதால் அந்த படத்திற்கு பின்பு தொடர்ந்து ஹீரோ தான் என்கிற கனவில், சந்திரமுகி படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொது திடீரென எனக்கு வேறு ஒரு கமிட்மென்ட் இருக்கு, அதனால் அந்த கமிட்மென்ட்டை முடித்து விட்டு பிறகு வந்து நடிக்கிறேன் என பி.வாசுவுக்கு டாட்டா காண்பித்து விட்டு சென்றுவிட்டார் வடிவேலு.

வடிவேலு மலை போல் நம்பியிருந்த நாய் சேகர் ரிட்டர்ன் படுதோல்வியை தொடர்ந்து, வடிவேலுவின் ஹீரோ கணவு முடிவுக்கு வந்தது, இந்நிலையில் சந்திரமுகி 2 மட்டுமே வடிவேலுவின் சினிமா கேரியரை முடிவு செய்யும் வகையில் இருந்த நிலையில், சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பின் நாளுக்கு நாள் வடிவேலுவின் அட்டூழியம் அதிகரிக்க, படப்பிடிப்பை மிக சிரமத்துடன் நடத்தி வந்துள்ளார் பி வாசு.

இந்நிலையில் தொடர்ந்து வடிவேலுவின் அட்டூழியம் நாளுக்கு நாள் படபிடிப்பில் அதிகரிக்க ஒரு கட்டத்தில் டென்ஷனான பி.வாசு அவரை முதலில் இங்கு இருந்து கிளம்பச் சொல்லுங்கள் என்று அருகில் இருந்த வடிவேலுவிடம் நேரடியாக சொல்லாமல் பக்கத்திலிருந்தவர்களிடம் தெரிவித்து வடிவேலு காதில் விழும்படி பேசி உள்ளார் இயக்குனர் பி வாசு.

உடனே வடிவேலு வந்து என்ன சார் என கேட்க, வடிவேல் முகத்தைக் கூட பார்க்காமல் தன்னுடைய இடது கையை அசைத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்பு போ… போ… இங்கிருந்து கிளம்பு போ… போ.. என்று அங்கே இருந்த பலர் மத்தியில் வடிவேலுவை அவமானப்படுத்தி உள்ளார் பி வாசு. இருந்தும் வடிவேலு பி வாசுவை சமாதானம் செய்ய முயற்சித்தும்.வடிவேலு முகத்தை கூட பார்க்க பார்க்காமல் தன்னுடைய இடது கையை ஆட்டி கிளம்பு கிளம்பு, இங்கிருந்து கிளம்பு கிளம்பு என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் பி வாசு.

இப்படி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக சந்திரமுகி 2 படம் எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ள நிலையில், இந்த படம் தான் வடிவேலுவின் சினிமா கேரியரை தீர்மானிக்கும் என்று எதிரிபார்க்க பட்டது. ஏற்கனவே பத்து வருடம் பட வாய்ப்பு இல்லாமல் முடங்கிய வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன் படு தோல்வியால், மிக பெரிய பின்னடைவை சந்தித்திருந்த வடிவேலு சந்திரமுகி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படம் வெளியாவதற்கு முன்பு பேசுகையில்,

என் மீது பொறாமை கொண்டவர்கள் இந்த படம் வெளிவந்த பின்னர் மேலும் வயித்தெறிச்சலாக இருக்கும் எனக் கூறினார் வடிவேலு. ஆனால் வடிவேலுவின் இந்த பேட்டியை பார்த்த பலரும் இதே பில்டப்பை தான் நாய் சேகர் படத்திலும் வடிவேலு கொடுத்தார். ஆனால் அவருக்கு அப்படம் பெரிய வரவேற்பை தரவில்லை. மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதே போல் தற்போது வடிவேலு சந்திரமுகி 2 படத்திற்கு கொடுத்துள்ள பில்டப் என்றும் தெரிவித்திருந்தனர், அதே போன்றே சந்திரமுகி 2 படம் வடிவேலுக்கு படு மொக்கையாக அமைந்து வடிவேலுவின் சினிமா கேரியரை முடுவுக்கு கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.