நடிகைகளிடம் அத்து மீறினாரா வடிவேலு? – ஷகிலா கொடுத்த ஷாக் தகவல்

0
Follow on Google News

90களில் மிகப்பெரிய கவர்ச்சி கண்ணியாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா. தமிழ் மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர். இவர் இன்றளவும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இடையில் கவர்ச்சி படங்களில் இருந்து வெளியேறி காமெடி ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கென்று எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது.

இடையில் பெரிய அளவில் எந்த ஒரு படமும் வெளிவராமல் இருந்தவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். இவர் தற்போது, யூடியூபில் நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார்.
தற்போது இவர் நடிகை பிரேம பிரியாவிடம் பேட்டி எடுத்தார். வல்லவன்,சிங்கம், ராஜா ராணி,மனிதன்,ஹர ஹர மஹா தேவகி,ஆடை, சபாபதி என்று பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் பிரேம பிரியா.

இவர் வடிவேலு, சந்தானம், விவேக், சூரி ஆகியோருடன் இணைந்து நடித்தார். தற்போது இவர் ஷகிலாவுக்கு அளித்த பேட்டியில் வடிவேலு மீது பல குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான், எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நானும் ஷூட்டிங்கிற்கு போவேன், ஆனால், வடிவேலு என்னை பார்த்ததும் இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார்.

இதுமாதிரி நிறைய படங்களில் நடந்து இருக்கு. இதை நான் ஒரு யூடியூப் சேனலில் சொல்லிவிட்டதால், என்னை ஒரு இயக்குநர் தொலைபேசியில் மிரட்டி மறுப்பு வீடியோ வெளியிட சொன்னார். ஆனால், நான் முடியாது உண்மையைத் தான் சொன்னேன் என்று சொல்லிவிட்டேன். சுறா படத்தில் வடிவேலுவுடன் நடித்த போது, ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என தெரிவித்தார் பிரேம பிரியா.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஷகிலா, நீ ஏன் வடிவேலு மீது மீ டூ கேஸ் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேம பிரியா எனக்கும் வடிவேலுக்கும் மீ டூ பிரச்சனை எல்லாம் இல்லை, அது வேறு பிரச்சனை என்று பதில் கூறினார். அதன்பின் பேசிய ஷகிலா, “இப்ப நீ சொல்றது மீ டு பிரச்சனை இல்லை என்று சொல்லலாம். வடிவேலுவை எனக்கு தெரியும். அவர் என்ன எதிர்பார்ப்பார் என்றும் எனக்கு தெரியும்.

வடிவேலு உங்களை ரொம்ப நல்லா தெரியும். இதுபோல் நிறைய பேர் உங்களை பற்றி சொல்கிறார்கள். ஏன் இவ்வளவு தவறுகள் செய்கிறீர்கள். கொஞ்சம் காலமாக நீங்கள் நடிக்காமல் இருப்பது எல்லாம் நீங்கள் இப்படி சின்ன சின்ன ஆர்ட்டிஸ்டுகளை நடிக்க விடாமல் செய்த பாவத்திற்கான பலன்தான்” என்று தாறுமாறாக வடிவேல் மீது குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் வடிவேலு சினிமா துறையில் எவ்வளவோ சாதித்து வருகிறார். அதே சமயம் அவரைப் பற்றி அவர் உடன் நடித்தவர்களை பல பேர் தினமும் குற்றம் சாட்டி வருகின்றனர்.