ஓஹோ என்று பாண்டிராஜ் சினிமா கேரியரை நாசம் செய்த சூர்யா… இன்றைய பாண்டிராஜ் நிலை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா சொந்த தயாரிப்பில் அவருடைய நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்தது, அதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சமூகம் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தமால் அடுத்த படமான பண்டி ராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்தில் பிஸியானார் சூர்யா.

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கு துணிந்தவன் மார்ச் கடந்த வெளியாகியனது. படம் வெளி வருவதற்கு முன்பே வன்னியர் சமூகத்தினர் அதிகம் இருக்கும் மாவட்டக்களில் உள்ள திரையரங்குகளில் சூர்யா நடிப்பில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிட கூடாது என எச்சரிக்கை விடுக்கும் வகையில் வன்னிய சங்கம் மற்றும் பாமகவினர் திரையரங்கு உரிமையாளர் மாவட்ட தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

இதனால் வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையில் வெளியிட்டால் வன்னிய சங்கம் மற்றும் பாமகவினர் திரையரங்கு முன்பு பாபா பட விவாகரத்தில் நடந்தது போன்று வன்முறையில் ஈடுபடலாம் என்கிற பதட்டம் ஏற்பட்ட நிலையில் அவ்வாறு அவர்கள் ஈடுபடவில்லை, மாறாக வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் உள்ள திரையரங்குகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் பெரும்பான்மையான திரையரங்குகளில் சூர்யா நடிப்பில் வெளியான எதார்க்கும் துணிந்தவன் படத்தை பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கியது திரையரங்குகள்.வன்னிய சமூகத்தினர் திரையரங்குகளை குறி வைக்கவில்லை சூர்யா என்கிற நடிகரை தான் குறி வைத்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இது சூர்யா மீது உள்ள வன்னியர் சமூக மக்களின் எதிரான பிரதிபலன் என கூறப்படுகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிட்ட திரையரங்குகள் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்து அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தும் சூர்யா அடுத்து படத்தில் நடிக்க கமிட்டாகி அதில் நடிக்க சென்றுவிட்டார். ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு முன்பு கடைக்குட்டி சிங்கம் என்கிற மெகா ஹிட் படத்தை கொடுத்த பண்டி ராஜ் எதற்கும் துணிந்தவன் படம் தோல்வியால் மிக பெரிய சரிவை சந்தித்தார்.

இதனை தொடர்ந்து அடுத்த படம் இயக்க பல முன்னணி நடிகர்களை சந்தித்து கதை சொல்ல முயற்சித்தும் எதற்கும் துணிந்தவன் தோல்வியால் அதற்கான வாய்ப்பு பாண்டிராஜுக்கு அமையவில்லை இதனால் தன்னுடைய அடுத்த படத்தை நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நல்லா இருந்த பாண்டிராஜ் சினிமா கேரியரை நாசம் செய்ததில் முக்கிய பங்கு சூர்யாவுக்கு உண்டு என்கிறது சினிமா வட்டாரங்கள்.