சூர்யாவை கட்டம் கட்டி வெளியேற்றிய வெற்றிமாறன்… வாடிவாசல் படத்தில் அடுத்த ஹீரோ யார்.?

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கமிட்டான வாடிவாசல் திரைப்படம் ஆரம்பித்த வேகத்துடன் அப்படி நிற்கிறது. இந்த படத்தில் அமீரை உள்ளே கொண்டு வந்த போது கடும் அதிருப்தி அடைந்த நடிகர் சூர்யா, ஏற்கனவே எங்கள் குடும்பத்திற்கு அமீருக்கு இடையில் பிரட்சனை ஓடி கொண்டிருக்கிறது அதனால் அமீர் வேண்டாம் என இயக்குனர் வெற்றிமாறனிடம் தெரிவித்துள்ளார் சூர்யா.

ஆனால், வெற்றிமாறன் அதெல்லாம் முடியவே முடியாது. வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தை நான் அமீரை மனதில் வைத்தே தான் எழுதினேன் என்று கரராக ஆரம்பத்திலேயே அமீரை வாடிவாசல் படத்திலிருந்து மாற்றவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் வெற்றி மாறன். இந்நிலையில் மீண்டும் சூர்யா குடும்பத்திற்கு அமீருக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. இதில் சூர்யா உறவினர் ஞானவேல் ராஜா மிக கடுமையாக அமீரை பேச.

அமீருக்கு ஆதரவாக சினிமா துறையை சேர்ந்த பலரும் ரவுண்டு கட்டி ஞானவேல் ராஜாவை வெளுத்து விட்டவர். இந்த நிலையில் மீண்டும் வெற்றிமாறனிடம் அமீரின் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்குமாறு சூர்யா கேட்டதாகவும், அதற்கு வெற்றிமாறன், வடிவாசலில் இருந்து அமீரை மாற்ற முடியாது என சற்று கோபமாகவே தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் சூர்யா குடும்பத்தினருக்கும் அமீருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு அமீர் பக்கம் வெற்றிமாறன் உறுதியாக இருப்பதால் சூர்யாவுக்காக அமீரின் நட்பை இழக்க வெற்றிமாறன் தயாராக இல்லை, அதே வேலையில் அமீரின் நட்புக்காக சூர்யாவை இழக்க தயாராக இருக்கிறார் வெற்றிமாறன் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் சூர்யா குடும்பத்திற்கு அமீருக்கு இடையில் நடந்த உச்சக்கட்ட பிரச்சனையின் போது, அமீர் உடன் வெற்றி மாறன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாடிவாசல் படத்தில் அமீரை யாருக்காவும் வெளியேற்ற மாட்டேன் என உணர்த்தினார் வெற்றிமாறன்.

இந்நிலையில் தற்பொழுது அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் கமிட்டாகி வரும் நடிகர் சூர்யாவிடம், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் வேறு எந்த ஒரு படத்திற்கும் கால் சீட் கொடுக்க கூடாது, தொடர்ந்து வாடிவாசல் படம் முடியும் வரை இந்த படத்தில் மட்டுமே நடிக்க கால் சீட் கொடுக்க வேண்டும் என வெற்றிமாறன் கேட்க அதற்கு தற்பொழுது சூர்யா முடியாது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு இணையான கதாபாத்திரமாக அமீர் நடிக்கும் கதாபாத்திரத்தை வெற்றிமாறன் உருவாகியுள்ளதால் இதில் இரண்டு ஹீரோ என்றும் ஓன்று சூர்யா, மற்றொன்று அமீர் என தகவல் வெளியாகியுள்ளது, அமீர் தனக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்தால், தன்னுடைய கதாபாத்திரத்தை விட அமீர் கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்படும் என்கிற அச்சம் சூர்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சூர்யாவே தானாக முன்வந்து வாடிவாசல் படத்தில் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது, அதே நேரத்தில் சூர்யாவை வாடிவாசல் படத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காவே தொடர்ந்து வேறு எந்த படத்தில் நடிக்காமல் வாடிவாசல் படத்திற்கு கால் சீட் கொடுக்க வேண்டும், மேலும் சூர்யாவை டம்மி செய்வது போன்று அமீர் கதாபாத்திரதிற்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் இயக்குனர் வெற்றிமாறன் செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.