நஷ்டத்தை சரி செய்ய சூர்யாவுக்கு தயாரிப்பு நிறுவனம் நெருக்கடி..! சூர்யா அடுத்த பட தயாரிப்பாளர் ஓட்டம்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கு துணிந்தவன் திரைப்படம் வெளியான முதல் நாளே திரையரங்குகளில் காற்று வாங்கி கொண்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னிய சமூகத்தினரை இழிவு படுத்தும் விதத்தில் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக அந்த சமூகத்தினர் மத்தியில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதன் காரணமாக, வன்னிய சமூகம் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் எதற்கும் துணிந்தவன் வெளியான தியேட்டர்களில் திரைப்படத்தை பார்க்க ஆட்கள் இல்லாமல் கற்று வாங்கி கொண்டிருக்கிறது. இதனால் வசூல் ரீதியாக மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது எதற்கும் துணிந்தவன் திரைப்படம். மேலும் படம் ஓரளவு நன்றாக இருந்திருந்தால் வன்னியர் அல்லாத பிற பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கும்.

ஆனால் படத்தில் முதல் பாதி படு மொக்கையாக இருக்கிறது, இரண்டாம் பாதியில் கதை ஓரளவு கை கொடுத்தாலும் கதைக்கு தேவையற்ற கட்சிகளால் இரண்டாம் பாதியும் சொல்லும்படியாக இல்லை. விஜய் தொலைக்காட்சி பிரபலன்களான, குக் வித் கோமாளி புகழ், பழைய ஜோக் தங்கதுரை, ராமர் போன்றவர்கள் எதற்காக இந்த படத்தில் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எழும் வகையில் அவர்களின் நகைச்சுவை காட்சிகள் படம் பார்ப்பவர்களை வெறுப்படைய செய்துள்ளது.

சூர்யாவின் பெற்றோர்களாக வரும் சரண்யா, சத்யராஜ் ஆகியோரை இயக்குனர் சரியாக பயன்படுத்த வில்லை என்றே சொல்லலாம், மேலும் படத்தை ஆழமாக ஆராய்ந்து விமர்சனம் செய்தால், படத்தின் கதையில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளது என்பதை உணரலாம், மொத்தத்தில் படம் பற்றிய மக்கள் விமர்சனம் என்ன என்பதை தமிழகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் கருத்துக்களை பார்க்கும் போது எதற்கும் துணிந்தவன் தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் ஒரு பக்கம் வன்னிய சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக அந்த சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் உள்ள எதற்கும் துணிந்தவன் வெளியான திரையரங்குகள் காற்று வாங்கி கொண்டிருக்கிறது, மற்ற பகுதிகளில் படம் எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை, இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் நஷ்ட்டத்தை சரி செய்ய அந்த படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வன்னிய சமூகத்தினரின் எதிர்ப்பின் காரணமாக மண்ணை கவ்வியதை தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படத்தை தயாரிக்க ரெடியாக இருந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தயக்கம் காட்டி சூர்யாவின் புதிய படத்தை கைவிட்டுவிட்டு ஓட்டம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யாவின் புதிய படங்களை அவர் சொந்தமாக தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மனைவி பேச்சை கேட்டு மார்க்கெட் இழந்த சூர்யா…புதிய படத்தை வாங்குவதில் தியேட்டர்கள் தயக்கம்… தேவையா இது.?