குடும்பத்துடன் ஒப்பாரி வைத்த சிவகுமார் குடும்பம்…விழித்து கொண்ட மக்கள்..! ஏமாற்றம் அடைந்த சிவகுமார் குடும்பம்..

0
Follow on Google News

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன், குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றி படங்களை அளித்து வரும் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படம் மக்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மண்ணை கவ்வியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் தோல்வியால் சூர்யாவுக்கு மிக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக சர்ச்சை கூறிய வகையில் பேசி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர். திருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிவகுமார் மீது ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு சென்றது, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசி இந்துக்களின் எதிப்புகளுக்கு உள்ளானார் ஜோதிகா. இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி தொடர்ந்து சிக்கலில் சிக்கி வருகிறது சிவகுமார் குடுப்பதினார்.

எப்போதெல்லாம் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் அல்லது அவர்கள் நடிப்பில் திரைப்படம் வெளியகிறதோ அப்போதெல்லாம் எதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள் சிவகுமார் குடும்பத்தினர், இது அந்த படத்தின் விளம்பரத்துக்காக செய்யும் இவர்களின் யுக்தி என்கிற குற்றசாட்டும் எழுந்தது. அதே போன்று சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெய் பீம்.

இந்த படத்தில் வன்னிய சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக அந்த சமூகத்தின் மத்தியில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை புறக்கணிப்போம் என அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிவகுமார் குடுப்பதினார் தங்களின் படங்களை விளம்பரம் செய்ய மற்றொரு யுக்தியை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதாவது இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் அறக்கட்டளை சார்பில் செய்யும் உதவிகளை, எப்போதெல்லாம் இவர்களின் புதிய படம் வெளிவர இருக்கின்றதோ அதற்கு சில தினங்களுக்கு முன் மேடை போட்டு செய்த உதவியை விளம்பரம் செய்து தம்பட்டம் அடிக்கும் சிவகுமார் குடும்ப தங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி கொண்டு அதை புதிய படத்துக்கான விளம்பரமாக மாற்றி கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு, அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் உழவன் பவுண்டேசன் சார்பில் நடந்த நிகழ்வில் ஒன்றில் சிவகுமார் கண்ணீர் விட்டு பேச, அதை பார்த்து இரண்டும் மகன்களும் கண் கலங்க இப்படி குடும்பமே ஒப்பாரி வைத்து எதற்கும் துணிந்தவன் படத்துக்கு அனுதாப விளம்பரம் தேடுவதாக சினிமா வாட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் சிவகுமார் குடும்பத்துக்கு வேறு வேலை இல்லை, என மக்கள் விழித்து கொண்ட நிலையில், மேலும் வன்னிய சமூகத்தினர் சூர்யாவை புறக்கணித்ததின் காரணம் எதார்க்கும் துணிந்தவன படத்தை திரையில் காண பார்க்க ஆட்கள் இல்லாமல் திரையரையரங்குகள் காற்று வாங்கி கொண்டிருப்பதால் சிவகுமார் குடும்பம் பெரும் ஏமாற்றம் அடைத்துள்ளது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மனைவி பேச்சை கேட்டு மார்க்கெட் இழந்த சூர்யா…புதிய படத்தை வாங்குவதில் தியேட்டர்கள் தயக்கம்… தேவையா இது.?