நீங்க தான் காப்பற்ற வேண்டும்… கடன் காரர்கள் கடும் டார்ச்சர் காரணமாக சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு..

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக, அதன் பின்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக அனைவரின் காரணத்தை ஈர்த்து, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகரானார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க தயங்கிய முன்னணி நடிகர்கள் இன்று சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்து நடிக்க போட்டி போடும் அளவுக்கு சிவகார்த்திகேயன் டாப் நடிகராக இருந்து வருகிறார்.

அதிகம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்கின்ற நோக்கில் சொந்தமாக படம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் சிவகார்த்திகேயன் . இவருடைய சொந்த தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நிலையில். அடுத்தடுத்து கடன் வாங்கி படம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுததி, பெரும் கடன் சுமைக்கு ஆளானார்.

சுமார் 100 கோடி ரூபாய் கடனாளியான சிவகார்த்திகேயனை, ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து கடன் கொடுத்தவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு படமும் வெளியாகும் போது தலா 25 கோடி வீதம் நான்கு படத்தில் 100 கோடி ரூபாய் கடனை அடைத்து விடுவதாக உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து அவருடைய நடிப்பில் வெளியான டான் படம் வெளியான போது, ஏற்கனவே சொன்னது போன்று முதல் தவணையாக 25 கோடி ரூபாய் கடனை அடைத்துள்ளார். ஆனால் அடுத்த சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் வெளியான போது இரண்டாவது தவணையான 25 கோடி ரூபாய் கடனை செலுத்தவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இந்த வருடத்திற்குள் பாக்கி 75 கோடி ரூபாய் கடனை அடைத்து விட வேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு தேதி குறித்துள்ளனர் கடன்காரர்கள். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் சிவகார்த்திகேயனின் சூழல் அறிந்து பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சிவகார்த்திகேயன் அணுகியுள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்து படத்திற்கு கால் சீட் தருகிறேன், தன்னுடைய கடன் பிரச்சனையை தீர்க்க ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து தொடர்ந்து இரண்டு படங்களில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் என்னை நீங்க தான் காப்பாற்ற வேண்டும் என சரண்டரான சிவகார்த்திகேயனுக்கு உதவி கரம் நீட்டியுள்ளது சன் பிக்ச்சர் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினியால் கடனாளியான தனுஷ்… கடனை அடைக்க என்ன செய்தார்  தனுஷ் தெரியுமா.?