கடும் நெருக்கடியில் தவிக்கும் சிவகார்த்திகேயனுக்கு .. மேலும் நெருக்கடி கொடுக்கும் தனுஷ்…

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தயாரித்த படங்கள் பல தோல்வி அடைந்து மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் கடன் வாங்கி படம் எடுத்து மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி அதனால் சுமார் 100 வரை கோடி வரை சிவகார்த்திகேயனுக்கு கடன் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் சிவகார்த்திகேயனுக்கு கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கினர், இதனால் சிவகார்த்திகேயன் படங்கள் அடுத்தடுத்து வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடன் பெற்றவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில். தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ்ன் போது சுமார் 25 கோடி ரூபாய் விதம் நான்கு தவணையில் 100 கோடி ரூபாய் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் வெளியான போது முதல் தவணையாக 25 கோடி ரூபாயை கொடுத்துள்ளார்.

ஆனால் அதன் பின்பு அவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான், பிரின்ஸ் போன்ற பட ரிலீஸ்ன் போது, ஏற்கனவே கடன் வாங்கியவர்களிடம் செய்த ஒப்பந்தம் படி நடந்து கொள்ளவில்லை சிவகார்த்திகேயன். இதனால் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய கூட்டமைப்பு, சிவகார்த்திகேயனிடம் இந்த வருடத்துக்குள் பாக்கி இருக்கும் மூன்று தவணை பணம் 75 கோடியை கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் தான் உள்ளது. ஒன்று மாவீரன் மற்றொன்று அயலான், இதில் அயலான் படம் தயாரிப்பாளர் கே ஜி ஆர் ராஜேஷ், இவர் டாக்டர் படத்தின் தயாரிப்பாளரும், டாக்டர் படம் ரிலீஸ் போது, கே ஜி ஆர் ராஜேஷ் வாங்கிய 27 கோடி ரூபாய் கடன் பிரச்சனையால் டாக்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் கே.ஜி.ஆர் ராஜேஷ் வாங்கிய 27 கோடி ரூபாய் கடனை ஏற்று கொண்டு சிவகார்த்திகேயன் கையெழுத்திட்ட பின்பு தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் வெளியான பின்பு சிவகார்த்திகேயன் ஏற்று கொண்ட கடன் தொகையை கே.ஜி.ஆர்.ராஜேஷ் திரும்ப தரவில்லை. இந்தநிலையில் டாக்டர் படம் பஸ்ட் காப்பி எடுத்து கொடுக்க 55 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனிடம் பேசிய கே.ஜி.ஆர்.ராஜேஷ் கடைசி கட்டத்தில் பண கஷ்டத்தில் இருப்பதாக 10 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனுக்கு பாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் டாக்டர் படத்தின் பாக்கி தொகை 10 கோடி ரூபாய், மற்றும் ஏற்று கொண்ட கடன் தொகை 27 கோடி ஆக மொத்தம் 37 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான், அயலான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சிவகார்த்திகேயன் கே.ஜி.ஆர்.ராஜேஷ்யிடம் தெரிவித்ததால் அயலான் படத்தின் அடுத்தகட்ட வேலை பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் கே.ஜி.ஆர்.ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டியதை தொடர்ந்து, மீண்டும் அயலான் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகும் அதே தேதியில் தனுஷ் தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

மேலும் அதே தேதியில் கார்த்திக் நடிப்பில் ஐயப்பன் படமும் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கடன் பிரச்சனையில் கடும் நெருக்கடியில் இருக்கும் சிவாகார்த்திகேயனுக்கு, அவருடைய படம் வெளியாகும் அதே தேதியில் தனுஷ் போன்ற நடிகர்கள் அவர்களின் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் அயலான் படத்தின் வசூல் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மிக பெரிய சிக்கலில் சிக்கி தவித்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்கிறது சினிமா வட்டாரங்கள்.