தன்னை தானே விஜய், அஜித் ரேஞ்சுக்கு பில்டம் கொடுத்த சிவகார்த்திகேயன்… பல கோடி இழந்து கடனாளியான பரிதாபம்..

0
Follow on Google News

தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன், மெரினா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக ஆதாரம் எடுத்தார். மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய உச்சத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி நடிகர் என்கிற பாராட்டையும் பெற்றிருந்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி நடிகர் ரஜினி, விஜய் ஆகியோரை பின்பற்றி இருந்திருந்தால், இன்று எந்த ஒரு கடன் தொல்லை இல்லாமல் இருந்திருப்பார். ஆனால், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் சிவகார்த்திகேயன், அவருடைய நண்பர் ஆர்.டி ராஜா உடன் இணைந்து சொந்தமாக SK புரொடக்ஷன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரிக்க ஆரம்பித்தார்.

சொந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷன்காக அதிக பணம் செலவு செய்து, சிவகார்த்திகேயனை ஓவர் பில்டப் கொடுத்து விளம்பரம் செய்யப்பட்டார். சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் நடிக்கும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து தன்னை ஒரு எம் ஜி ஆர் போன்ற கொடை வள்ளல் போன்று காட்டி கொண்டார்.

இதுபோன்று பப்ளிசிட்டிக்காக பல கோடியை வாரி இறைத்தனர். இதனால் ஒவ்வொரு படத்தின் கிடைக்கும் வரவை விட செலவு அதிகமானது. இருந்தும் விளம்பரம் மோகத்தில் தொடர்ந்து அதே பார்முலாவை பின்பற்றி தொடர் தோல்வியை சந்தித்து வந்தார் சிவகார்த்திகேயன் கடனில் சிக்கி அதில் இருந்து வெளிவராமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறதை விட்டு விட்டு பறக்க ஆசைப்பட்டு அவர் வைத்த அகலக்கால் தான் அவரை இந்த அளவுக்கு கடனில் சிக்க வைத்துள்ளது என கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மார்க்கெட்டில் என்ன பிஸ்னஸ் இருக்கிறதோ அதன் அடிப்படையில் அதற்குள் பட்ஜெட்டில் இயங்குவது தான் அவருக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆனால் தன்னை நடிகர் ரஜினி, விஜய், அஜித் இணையாக பில்டப் கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மார்க்கெட் நிலவரத்தில் என்ன வியாபாரம் இருக்கிறதோ அதை மீறி பட்ஜெட்டை விட அதிகமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு செலவு செய்தது தான் மிகப்பெரிய கடனாளியாக ஆனதற்கு காரணம். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா ரெமோ வேலைக்காரன் என பல படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.அதன் விளைவாகத்தான் சுமார் 100 கோடி ரூபா கடனில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்கினார்.

இந்நிலையில் ஆர்டி ராஜா மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஆனால் மொத்த கடன் சுமையும் சிவகார்த்திகேயன் தலையில் விழுந்தத இதன் பின்பு தனியாக டான் மற்றும் டாக்டர் படங்களை தயாரித்து நடித்தார். இந்த இரண்டு படமும் நல்ல லாபத்தை சிவகார்த்திகேயனுக்கு பெற்று தந்தது.

இருந்தும் இன்றும் வாக்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் கடன் கொடுத்தவர்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படம் ரிலீஸின் போது கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க பெரும் போராட்டமே நடத்தி வருகிறார் சிவகார்த்திகேயன் என்கிறது சினிமா வட்டாரங்கள்.